தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி தயாரிக்க, ரவி அரசு இயக்க, விஷால், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்க 'மகுடம்' படம் ஆரம்பமானது. படப்பிடிப்பு ஆரம்பமாகி ஓரிரு வாரங்களுக்குப் பிறகு, அப்படத்தை ரவி அரசு இயக்கவில்லை என கிசுகிசு வெளிவந்தது. விஷால் தான் படத்தை இயக்கி வருவதாக பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் தீபாவளியன்று, 'மகுடம்' படத்தை தானே இயக்கி வருவதாக அறிவித்தார் விஷால். இருந்தாலும் படத்தின் போஸ்டரில் கதை ரவி அரசு என்று இருந்தது. கதையின் உரிமையை மட்டும் வாங்கிக் கொண்டு அவருக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்து செட்டில் செய்துவிட்டார்கள் என்று தகவல் வெளியானது. ஆனால், பேசியபடி தொகையைத் தரவில்லை என்று தற்போது ரவி அரசு, இயக்குனர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து விஷால் மற்றும் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி ஆகியோரிடம் இயக்குனர்கள் சங்கம் சார்பாகப் பேசி வருகிறார்களாம். விரைவில் இது குறித்து சுமூக முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் நடிகர் சங்கத்தின் செயலாளராக இருக்கும் விஷால் இப்படி செய்தது குறித்து திரையுலகினர் சிலர் விமர்சித்துள்ளார்கள்.