32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
மண்டேலா, மாவீரன் ஆகிய படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கின்றார். இது விக்ரமின் 63வது படமாக உருவாகிறது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. ஏற்கனவே இதில் கதாநாயகியாக நடிக்க சாய் பல்லவி உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சாய் பல்லவியின் கால்ஷீட் பிரச்சினையால் நடிக்கவில்லை. தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி இருவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் ஸ்ரீநிதி ஷெட்டி ஏற்கனவே விக்ரம் உடன் கோப்ரா படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.