பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல்களை ஹேமா கமிட்டி அறிக்கை உறுதிப்படுத்தியது. இதையடுத்து பல நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை பட்டியலிட்டு வருவதால் அந்த சினிமாவே கதி கலங்கி உள்ளது.
இதுபற்றி நடிகை நிவேதா தாமஸ் கூறுகையில், ‛‛ஹேமா கமிஷன் அறிக்கை மூலம் வெளியான தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன. சினிமாவில் பெண்கள் வீட்டில் இருப்பதை விட வேலை செய்யும் இடத்தில் தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள். எனவே வேலை செய்யும் இடத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு முக்கியம். மலையாள சினிமாவை போல் மற்ற சினிமா துறையிலும் ஹேமா கமிஷன் வர வேண்டும்'' என்கிறார்.




