ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பிறகு மலையாள சினிமாவில் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. முகேஷ், இடைவேள பாபு, ஜெயசூர்யா, சித்திக் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர். இவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மலையாளத்தில் பிரபலமான நடிகரான ‛பிரேமம்' புகழ் நிவின் பாலி மீதும் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
வாய்ப்பு தருவதாக சொல்லி நிவின் பாலி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி பெண் ஒருவர் எர்ணாகுளம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.