லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி கடந்த ஆண்டு (2024) ஜனவரி 25ல் மறைந்தார். மகளின் நினைவு நாளன்று இளையராஜா தனது 'எக்ஸ்' தளப்பக்கத்தில், ''பவதாரிணியின் பிறந்த நாளான பிப்ரவரி 12 அன்றைக்கு அவரின் திதியும் வருகிறது. இரண்டையும் சேர்த்து நினைவுநாள் நிகழ்ச்சியாக வைக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, பவதாரிணியின் பிறந்தநாளான இன்று (பிப்.,12), அவரது நினைவிடம் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் இசைக்கலைஞர்களை வைத்து நினைவு நிகழ்ச்சி நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குனரும், பவதாரிணியின் சகோதரருமான வெங்கட்பிரபு தனது எக்ஸ் தளத்தில், 'ஓராண்டு ஆகிவிட்டதை நம்பவே முடியவில்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கச்சி' எனக் குறிப்பிட்டு, சென்ற வருடன் இதேநாளில் பகிர்ந்த பவதாரிணி உடன் இருக்கும் புகைப்படத்தை ரீடுவீட் செய்துள்ளார்.