யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
'யானைக்கும் அடி சறுக்கும்' என்பது பழமொழி. அது சினிமாவுக்கும் பொருந்தும். 1980களில் வெளியான 'ஆனந்த கும்மி' படத்தின் கதையை பாடலாசிரியர் வைரமுத்து எழுதியிருந்தார், இளையராஜா இசை அமைத்து, இளையராஜா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி தனது மனைவி ஜீவா இளையராஜாவை தயாரிப்பாளராக்கி படத்தை உருவாக்கினார்.
ஆனாலும் படம் படுதோல்வி அடைந்தது. காரணம் கதை அப்படி. கிராமத்து பண்ணையார் மகனும், அந்த பண்ணை வீட்டில் வேலை செய்யும் ஏழைத் தாயின் மகளும் சின்ன வயதில் இருந்தே நண்பர்கள், உரிய பருவம் வந்ததும் காதலிக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு நாயகனின் தந்தையும், நாயகியின் தாயும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். காரணம் இருவருக்கும் உள்ள கள்ள உறவு. அந்த உறவுப்படி இருவரும் அண்ணன், தங்கை என்பதால் இந்த எதிர்ப்பு. அதை மீறி காதலிப்பார்கள். இதனால் பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள்.
இந்த கதையை ரசிகர்கள் ஏற்கவில்லை. பாலகிருஷ்ணன் என்ற புதுமுகம் இயக்கி இருந்தார். பாலச்சந்திரன், அஸ்வினி என்ற புதுமுகங்களுடன் கவுண்டமணி, செந்தில், பேபி ஷாலினி, பசி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இந்த படம் இப்போது எங்கு இருக்கிறது என்று தெரியாது. ஆனால் படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல்கள் மட்டும் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எஸ்.பி.சைலஜா பாடிய 'ஆனந்தகும்மி', ஜானகி, சைலஜா பாடிய 'ஒரு கிளி உருகுது'. இளையராஜா பாடிய 'திண்டாடுதே இரண்டு கிளியே..'. உள்ளிட்ட பாடல்கள்தான் அவை.