இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
30 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் தேவா. 400 படங்களுக்கு இசையமைத்துள்ள இவரின் ஸ்பெஷலே கானா பாடல் தான். இன்றைக்கு இருக்கும் பல கானா பாடகர்களுக்கு முன்னோடியாகவும் உள்ளார். தற்போதும் குறிப்பிடத்தக்க சில படங்களுக்கு இவர் இசையமைக்கிறார். அதோடு இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛நான் காப்பிரைட்ஸ் எல்லாம் கேட்க மாட்டேன். என் பாடல்களை இப்போதுள்ள இயக்குனர்கள் அவர்களது படங்களில் பயன்படுத்துவதால் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுடன் நான் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்களின் ரசனைக்கு முன்பு எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது'' என தெரிவித்துள்ளார்.
ஒருபக்கம் இளையராஜா அவரது பாடல்கள், இசையை பயன்படுத்துவது தொடர்பாக காப்பிரைட் கேட்பது, அது தொடர்பாக சில சர்ச்சைகள், வழக்குகள் என உள்ள சூழலில் தேவாவின் இந்த அணுகுமுறையை பலரும் பாராட்டுகின்றனர்.