இளையராஜாவிற்கு பாராட்டு விழா : முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் | வெற்றிமாறன் படக் கம்பெனியை மூடியது ஏன் |
30 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் தேவா. 400 படங்களுக்கு இசையமைத்துள்ள இவரின் ஸ்பெஷலே கானா பாடல் தான். இன்றைக்கு இருக்கும் பல கானா பாடகர்களுக்கு முன்னோடியாகவும் உள்ளார். தற்போதும் குறிப்பிடத்தக்க சில படங்களுக்கு இவர் இசையமைக்கிறார். அதோடு இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛நான் காப்பிரைட்ஸ் எல்லாம் கேட்க மாட்டேன். என் பாடல்களை இப்போதுள்ள இயக்குனர்கள் அவர்களது படங்களில் பயன்படுத்துவதால் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுடன் நான் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்களின் ரசனைக்கு முன்பு எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது'' என தெரிவித்துள்ளார்.
ஒருபக்கம் இளையராஜா அவரது பாடல்கள், இசையை பயன்படுத்துவது தொடர்பாக காப்பிரைட் கேட்பது, அது தொடர்பாக சில சர்ச்சைகள், வழக்குகள் என உள்ள சூழலில் தேவாவின் இந்த அணுகுமுறையை பலரும் பாராட்டுகின்றனர்.