நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
1950களில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் பல படங்கள் தயாரானது. அதே நேரத்தில் பெங்காலி மொழி திரைப்படங்கள் பல ரீமேக் செய்யப்பட்டது. பெங்காலி நாடகங்கள் தமிழ் சினிமா ஆனது. முதன் முறையாக தமிழ் மற்றும் பெங்காலியில் தயாரான 'ரத்னதீபம்', பெங்காலி டைட்டில் 'ரத்னதீப்'.
தீபகி போஸ் என்ற பெங்கலாலி இயக்குனர் இயக்கி, தயாரித்தார். அபி பட்டாச்சார்யா, அனுபமா, சன்யல், சாயாதேவி நடித்தனர். ரூபின் சட்டர்ஜி இசை அமைத்திருந்தனர்.
ஒரு பெரிய கோடீஸ்வர வீட்டின் வாரிசு திடீரென காணாமல் போகிறான். இதை தெரிந்து கொள்ளும் ஒருவன் தான்தான் காணாமல்போன வாரிசு என்று அந்த குடும்பத்திற்குள் நுழைகிறான். ஒரு கட்டத்தில் அவர்கள் காட்டும் அன்பில் திளைக்கும் அவன் உண்மையை சொல்லிவிடுகிறான். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இதேபோன்ற கதை பின்னாளில் நிறைய படங்களில் வந்தது. படம் இரண்டு மொழிகளிலும் வெற்றி பெற்றது.