லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
தமிழ் சினிமாவின் சீனியர் ஹீரோவான கமல்ஹாசன் தமிழைத் தவிர, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நேரடிப் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், கடந்த பல வருடங்களாக தமிழில் மட்டுமே நடித்து வருகிறார்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்குத் தயாரிப்பாளர்களின் பான்-இந்தியா படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளர்களாக இருக்கும் நாராயண்தாஸ் நரங், சுனில் நரங், பரத் நரங், புஸ்குர் ராம்மோகன் ராவ் ஆகியோர் கமல்ஹாசனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
'விக்ரம், இந்தியன் 2' படங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்க உள்ள பான்-இந்தியா படத்தைத் தயாரிக்க அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கலாம் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் தான் தற்போது நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்து வரும் 'லவ் ஸ்டோரி' படத்தைத் தயாரித்து முடித்துள்ளார்கள். அடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தையும் தயாரிக்கப் போகிறார்கள்.
தெலுங்குத் தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து சில பிரம்மாண்டமான படங்களைத் தயாரிக்கப் போகிறார்கள். விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் அப்படி படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகச் சொல்கிறார்கள்.