ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
தமிழ் சினிமாவின் சீனியர் ஹீரோவான கமல்ஹாசன் தமிழைத் தவிர, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நேரடிப் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், கடந்த பல வருடங்களாக தமிழில் மட்டுமே நடித்து வருகிறார்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்குத் தயாரிப்பாளர்களின் பான்-இந்தியா படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளர்களாக இருக்கும் நாராயண்தாஸ் நரங், சுனில் நரங், பரத் நரங், புஸ்குர் ராம்மோகன் ராவ் ஆகியோர் கமல்ஹாசனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
'விக்ரம், இந்தியன் 2' படங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்க உள்ள பான்-இந்தியா படத்தைத் தயாரிக்க அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கலாம் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் தான் தற்போது நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்து வரும் 'லவ் ஸ்டோரி' படத்தைத் தயாரித்து முடித்துள்ளார்கள். அடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தையும் தயாரிக்கப் போகிறார்கள்.
தெலுங்குத் தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து சில பிரம்மாண்டமான படங்களைத் தயாரிக்கப் போகிறார்கள். விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் அப்படி படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகச் சொல்கிறார்கள்.