கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
தமிழ் சினிமாவின் சீனியர் ஹீரோவான கமல்ஹாசன் தமிழைத் தவிர, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நேரடிப் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், கடந்த பல வருடங்களாக தமிழில் மட்டுமே நடித்து வருகிறார்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்குத் தயாரிப்பாளர்களின் பான்-இந்தியா படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளர்களாக இருக்கும் நாராயண்தாஸ் நரங், சுனில் நரங், பரத் நரங், புஸ்குர் ராம்மோகன் ராவ் ஆகியோர் கமல்ஹாசனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
'விக்ரம், இந்தியன் 2' படங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்க உள்ள பான்-இந்தியா படத்தைத் தயாரிக்க அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கலாம் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் தான் தற்போது நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்து வரும் 'லவ் ஸ்டோரி' படத்தைத் தயாரித்து முடித்துள்ளார்கள். அடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தையும் தயாரிக்கப் போகிறார்கள்.
தெலுங்குத் தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து சில பிரம்மாண்டமான படங்களைத் தயாரிக்கப் போகிறார்கள். விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் அப்படி படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகச் சொல்கிறார்கள்.