கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
இம்சை அரசன் 24ம் புலிகேசி பட விவகாரத்தில் சில ஆண்டுகளாக படங்களில் எதிலும் நடிக்காமல் இருந்து வந்தார் நடிகர் வடிவேலு. சமீபத்தில் இந்த பட பிரச்னை தீர்க்கப்பட்டதால் மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். முதல்படமாக சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் படம் உருவாகிறது. இதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் லைகா நிறுவனத்துடன் 3 படங்களில் நடிக்க உள்ளார் வடிவேலு. மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வரும் வடிவேலு சமீபகாலமாக வெளியிடங்களிலும் அவரை காண முடிகிறது.
இந்நிலையில் நாய்சேகர் படம் தொடர்பாக வடிவேலு - சுராஜ் சென்னையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் சந்தித்து கதை விவாத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. மீண்டும் வடிவேலுவை திரையில் காண இருப்பதை எண்ணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.