ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இம்சை அரசன் 24ம் புலிகேசி பட விவகாரத்தில் சில ஆண்டுகளாக படங்களில் எதிலும் நடிக்காமல் இருந்து வந்தார் நடிகர் வடிவேலு. சமீபத்தில் இந்த பட பிரச்னை தீர்க்கப்பட்டதால் மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். முதல்படமாக சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் படம் உருவாகிறது. இதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் லைகா நிறுவனத்துடன் 3 படங்களில் நடிக்க உள்ளார் வடிவேலு. மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வரும் வடிவேலு சமீபகாலமாக வெளியிடங்களிலும் அவரை காண முடிகிறது.
இந்நிலையில் நாய்சேகர் படம் தொடர்பாக வடிவேலு - சுராஜ் சென்னையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் சந்தித்து கதை விவாத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. மீண்டும் வடிவேலுவை திரையில் காண இருப்பதை எண்ணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.