பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
இம்சை அரசன் 24ம் புலிகேசி பட விவகாரத்தில் சில ஆண்டுகளாக படங்களில் எதிலும் நடிக்காமல் இருந்து வந்தார் நடிகர் வடிவேலு. சமீபத்தில் இந்த பட பிரச்னை தீர்க்கப்பட்டதால் மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். முதல்படமாக சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் படம் உருவாகிறது. இதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் லைகா நிறுவனத்துடன் 3 படங்களில் நடிக்க உள்ளார் வடிவேலு. மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வரும் வடிவேலு சமீபகாலமாக வெளியிடங்களிலும் அவரை காண முடிகிறது.
இந்நிலையில் நாய்சேகர் படம் தொடர்பாக வடிவேலு - சுராஜ் சென்னையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் சந்தித்து கதை விவாத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. மீண்டும் வடிவேலுவை திரையில் காண இருப்பதை எண்ணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.