கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
மறைந்த முதலமைச்சரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக 'தலைவி' படம் உருவாகியுள்ளது. இப்படம் இந்த வாரம் செப்டம்பர் 10ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பிரமோஷனின் ஒரு பகுதியாக சினிமா பெண் பிரபலங்களுக்கு காஞ்சிபுரம் பட்டுப்புடவையை பரிசாக வழங்கி வருகிறது படக்குழு.
ஜெயலலிதாவுக்கு, காஞ்சிபுரம் பட்டுப்புடவை என்றால் மிகவும் பிடிக்கும். அதனால்தான் அழகான காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளை பரிசாக அளிக்கிறார்களாம்.
அந்தப் பரிசுடன் அனுப்பப்படும் கடிதத்தில், “பெண்களிடம் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத நம்பிக்கையைக் கொண்டாடுவது தான் 'தலைவி'. உங்களது விடாமுயற்சியால் சாத்தியமற்றதை சாத்தியமாக்கிய உங்களது நம்பிக்கையை நாங்கள் வணங்குகிறோம். உங்களிடமுள்ள தலைவியைக் கொண்டாடுவோம். நிஜத் தலைவி ஜெயலலிதாவின் அபிமான காஞ்சிபுரம் பட்டுப் புடவையை உங்களுக்கு வழங்க விருப்பப்படுகிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளனர்.