மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

ஒரு படம் வெற்றியடைந்ததுமே அந்தப் படம் சம்பந்தப்பட்ட முக்கியமானவர்கள் சம்பளத்தை உயர்த்திவிடுவது வழக்கம். பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி நாயகனாக நடித்து வெளிவந்த 'தலைவன் தலைவி' படம் 75 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் ஒரு படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதற்காக இருவருமே அவர்களது சம்பளத்தை உயர்த்திக் கேட்டுள்ளார்களாம். ஆனால், அது குறித்து தயாரிப்பு நிறுவனம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் இப்போது கதாநாயகர்களுக்கான சம்பளம் மிக அதிகமாகிவிட்டது. ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரது சம்பளம் 200 கோடியைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். விஜய் இனி நடிக்கப் போவதில்லை. தேர்தலுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கடுத்துள்ள நடிகர்களில் 50 கோடி சம்பளம் கேட்கும் நடிகர்கள் தான் உள்ளனர். அவர்களில் சிலர் விரைவில் 100 கோடி சம்பளம் கேட்கத் தயாராக உள்ளதாகவும் சொல்கிறார்கள்.