ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து தற்போது மகேஷ் பாபு நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ராஜமவுலி. அவரது படங்களில் தொடர்ந்து அவருக்கு பக்கபலமாக நின்று இசையமைத்து வருபவர் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி. தற்போது ராஜமவுலியன் இந்த புதிய படத்திற்கும் இசைப் பணிகளை துவங்கி மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இந்த படத்திற்கான முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். குளோப் ட்ரோட்டர் என இந்த பாடலுக்கு வைக்கப்பட்ட டைட்டில் தான் படத்தின் டைட்டிலாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கீரவாணியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் ஸ்ருதிஹாசன்..
இது குறித்து அவர் கூறும்போது, “கீரவாணியுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். என்ன ஒரு பவர்புல்லான டிராக் அது.. நான் கீரவாணி சாரின் முன்பாக அமைதியாக அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். எப்போதுமே அவர் விக்னேஸ்வர மந்திரத்தை சொல்லித்தான் எதையும் ஆரம்பிப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படித்தான் இப்போதும் அவர் ஆரம்பிக்க போகிறார் என்று நினைத்தால் ஆச்சரியமாக என் தந்தையின்(கமல்) பாடல் ஒன்றை பாடி அவர் துவங்கியது எனக்கு உண்மையிலேயே ஸ்பெஷல் சர்ப்ரைஸ் ஆக இருந்தது” என்று கூறியுள்ளார்.