தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெற்றிக்கு பின்னர், இயக்குனர் ராஜமவுலி, மகேஷ்பாபுவை வைத்து படம் இயக்குவதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வந்தது. காடுகளை மையப்படுத்தியும், காசியின் வரலாற்றை உள்ளடக்கிய கதையாகயும் உருவாகும் இப்படம் மகேஷ்பாபுவுக்கு 29வது படம். இதற்கிடையே இப்படத்தில் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. பிரித்விராஜ் 'கும்பா' என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக போஸ்டரும் வெளியிட்டனர்.
வரும் நவ.,15ல், இப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் தலைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளனர். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட விழா நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த விழாவை ஓடிடி தளத்தில் மாலை 6 மணி முதல் நேரலையாக ஒளிப்பரப்ப உள்ளனர். படத்தின் போஸ்டரை 100 அடி உயரமுள்ள எல்இடி திரையில் வெளியிடுகின்றனர்.
இந்த நிலையில், எம்.எம். கீரவாணி இசையில் 'குளோப் ட்ரோட்டர்' என்ற பெயரில் படக்குழு ஒரு பாடலை வெளியிட்டுள்ளது. நடிகை ஸ்ருதிஹாசன் உணர்ச்சி பொங்க பாடியுள்ள இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.