புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சுராஜின் கத்திச்சண்டையில் மறுபடியும் காமெடி வேடத்துக்கு திரும்பினார் வடிவேலு. ஆனால், அதையடுத்து இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சினையால் ரெட் கார்டு போடப்பட்டு, வடிவேலு படங்களில் நடிக்க மறைமுக தடை விதிக்கப்பட்டது. நான்கு வருடங்களுக்குப் பிறகு நேற்று முன் தினம் அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. தடையை விலக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியிருக்கும் வடிவேலு, தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் என்னுடைய ரசிகர் மன்றம் தான். அடுத்து இரண்டு படங்களில் நாயகனாக நடித்த பின் காமெடி வேடங்களுக்கு திரும்புவேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் செய்தி சேனல் ஒன்று வடிவேலுவுக்கு வாழ்த்து சொல்ல போனில் தொடர்பு கொண்ட போது அவரிடம் 'அரசியலுக்கு முன்ன மாதிரி வருவீங்களா ' என்று கேட்கப்பட்டதற்கு கொஞ்சம் கோபமான வடிவேலு, பேசிட்டு இருக்கும் போது, உள்ள குச்சிய விடக்கூடாது, தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.