மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
1991ல் வெளியான இதயம் என்ற படத்தில் இயக்குனரானவர் கதிர். முரளி - ஹீரா நடித்த அப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதையடுத்து உழவன், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் போன்ற படங்களை தொடர்ச்சியாக காதல் கதைகளில் படமாக்கினார். ஆனால் 2002-ல் அவர் தயாரித்து இயக்கிய காதல் வைரஸ் தோல்வியடைந்தது. அதன்பிறகு பல வருடங்களாக படம் இயக்காமல் இருந்தவர் 2016ல் நான் லவ் டிராக் என்ற பெயரில் ஒரு கன்னட படத்தை இயக்கினார்.
இந்நிலையில் தற்போது 19 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்கும் கதிர், புதுமுக நடிகர் கிஷோர் என்பவரை வைத்து மீண்டும் ஒரு புதுமையான காதல் கதையுடன் களமிறங்கப் போகிறார். இப்படத்தை ஆர்.கே.இண்டர் நேசனல் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
கதிர் அளித்த பேட்டி: நாயகன் மட்டுமே புதியவர் மற்றபடி படக்குழுவினர் அனைவருமே உலகத்தரம் மிக்க படைப்பாளிகள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நாசர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் நடிப்பவர்கள் மற்ற தொழில்நுட்ப குழுவினர் தேர்வு நடந்து வருகிறது. என் ஒவ்வொரு படமுமே நீண்ட இடைவேளைக்கு பின்பே வந்துள்ளது. இடையில், கதைக்காக சில காலம் கடந்து விட்டது. தற்போது இப்படத்தை ஆரம்பபிப்பதில் மகிழ்ச்சி. காதல், ஆக்சன் கலந்த மியூசிக்கல் படமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.