என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக இந்த வருடம் ஏப்ரல் மாதக் கடைசியில் தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. சுமார் நான்கு மாத காலமாக தியேட்டர்களைத் திறக்காமல் மூடியே வைத்துள்ளனர். மற்ற தொழில்கள் சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட அரசு அனுமதித்துள்ள நிலையில் தியேட்டர்களைத் திறக்க மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து தமிழகத்தில் தியேட்டர்களைத் திறக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தனர்.
அதில், “சமூக இடைவெளி கடைபிடித்தல், கிருமி நாசினி தெளித்தல், வெப்ப நிலை பரிசோதனை மற்றும் தியேட்டர் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய பின்னரே அனுமதிப்போம்,” என தெரிவித்துள்ளனர்.
மேலும், தியேட்டர்கள் திறக்கப்படாத காரணத்தால் தமிழக அரசுக்கும் வர வேண்டிய வரி வருவாய் நின்றுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தியேட்டர்கள் சங்கத்தினரின் இந்த கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து தமிழக அரசு தியேட்டர்களைத் திறக்க உத்தரவிடுமா என்ற எதிர்பார்ப்பு தியேட்டர்காரர்களிடம் ஏற்பட்டுள்ளது.