புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளம் கிராமத்தில் நடந்த வன்முறை சம்பவத்தை மையமாக வைத்து மாரி செல்வராஜ் இயக்கி வெளியாகியுள்ள படம் கர்ணன். தனுஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஆரம்பத்தில் அமோக வரவேற்பு கிடைத்தபோதும் பின்னர் சில சர்ச்சைகளையும் சந்தித்தது. என்றாலும் படத்தை அது பாதிக்கவில்லை. கொரோனா நேரத்திலும் தொய்வில்லாமல் வசூலித்து வருகிறது கர்ணன்.
அதோடு, இந்த படத்திற்காகவும் தனுசுக்கு இன்னொரு தேசிய விருது கிடக்கும் என்கிற கருத்துக்களும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனபோதும் இதுபோன்ற மகிழ்ச்சியை தமிழகத்தில் இருந்து கொண்டாடி மகிழ முடியாத வகையில் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார் தனுஷ்.
இந்த நிலையில், தமிழ்ப்புத்தாண்டான நேற்று கர்ணன் படத்தில் வரும் பொம்மையின் பாதி முகத்தையும், தனது பாதி முகத்தையும் இணைத்து ஒரு போஸ்டரை தனது டுவிட்டரில் வெளியிட்டு, கர்ணன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கு நன்றியும் தெரிவித்துள்ளார் தனுஷ்.