புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழில் 'அஞ்சாதே' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் அஜ்மல். கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி நடித்து வரும் அஜ்மல், தற்போது தமிழில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் மலையாளத்தில் இவரது தம்பி அஸ்கர் அமீர் இயக்குனராக அறிமுகமாகும் படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார் அஜ்மல்.
“என்னுடைய தம்பி தான் என்றாலும், எப்படி டைரக்ட் பண்ணுவானோ என்கிற டென்சனுடன் தான் படப்பிடிப்புக்கு சென்றேன்.. ஆனால் ஒரு டைரக்டராக தன்னை அழகாக பொருத்திக் கொண்டு விட்டான். ஒவ்வொரு காட்சியையும் படு நேர்த்தியாக, அதேசமயம் காட்சிக்கு என்ன தேவை என்பதை மட்டும் படமாக்கியதை கண்டு நான் ஆச்சர்யப்பட்டு போனேன்.” என தம்பியின் டைரக்சன் பற்றி பெருமைப்படுகிறார் நடிகர் அஜ்மல்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு மூணாறு, குட்டிக்கணம், முண்டக்காயம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது.. ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஹாரர் கதை எழுதும் எழுத்தாளராக நடித்துள்ளார் அஜ்மல்.. மலைப்பகுதி ஒன்றுக்கு போட்டோகிராபர் ஒருவருடன் செல்லும் அஜ்மல், அங்கே சந்திக்கும் திகிலான அனுபவங்களும் அதன் பின்னணியில் அடங்கியுள்ள மர்மங்களும் தான் படத்தின் கதையாம்.