பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழில் 'அஞ்சாதே' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் அஜ்மல். கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி நடித்து வரும் அஜ்மல், தற்போது தமிழில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் மலையாளத்தில் இவரது தம்பி அஸ்கர் அமீர் இயக்குனராக அறிமுகமாகும் படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார் அஜ்மல்.
“என்னுடைய தம்பி தான் என்றாலும், எப்படி டைரக்ட் பண்ணுவானோ என்கிற டென்சனுடன் தான் படப்பிடிப்புக்கு சென்றேன்.. ஆனால் ஒரு டைரக்டராக தன்னை அழகாக பொருத்திக் கொண்டு விட்டான். ஒவ்வொரு காட்சியையும் படு நேர்த்தியாக, அதேசமயம் காட்சிக்கு என்ன தேவை என்பதை மட்டும் படமாக்கியதை கண்டு நான் ஆச்சர்யப்பட்டு போனேன்.” என தம்பியின் டைரக்சன் பற்றி பெருமைப்படுகிறார் நடிகர் அஜ்மல்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு மூணாறு, குட்டிக்கணம், முண்டக்காயம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது.. ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஹாரர் கதை எழுதும் எழுத்தாளராக நடித்துள்ளார் அஜ்மல்.. மலைப்பகுதி ஒன்றுக்கு போட்டோகிராபர் ஒருவருடன் செல்லும் அஜ்மல், அங்கே சந்திக்கும் திகிலான அனுபவங்களும் அதன் பின்னணியில் அடங்கியுள்ள மர்மங்களும் தான் படத்தின் கதையாம்.