ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
தமிழில் 'அஞ்சாதே' படம் மூலம் பிரபலமானவர் நடிகர் அஜ்மல். கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மாறி மாறி நடித்து வரும் அஜ்மல், தற்போது தமிழில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் மலையாளத்தில் இவரது தம்பி அஸ்கர் அமீர் இயக்குனராக அறிமுகமாகும் படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறார் அஜ்மல்.
“என்னுடைய தம்பி தான் என்றாலும், எப்படி டைரக்ட் பண்ணுவானோ என்கிற டென்சனுடன் தான் படப்பிடிப்புக்கு சென்றேன்.. ஆனால் ஒரு டைரக்டராக தன்னை அழகாக பொருத்திக் கொண்டு விட்டான். ஒவ்வொரு காட்சியையும் படு நேர்த்தியாக, அதேசமயம் காட்சிக்கு என்ன தேவை என்பதை மட்டும் படமாக்கியதை கண்டு நான் ஆச்சர்யப்பட்டு போனேன்.” என தம்பியின் டைரக்சன் பற்றி பெருமைப்படுகிறார் நடிகர் அஜ்மல்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு மூணாறு, குட்டிக்கணம், முண்டக்காயம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றுள்ளது.. ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஹாரர் கதை எழுதும் எழுத்தாளராக நடித்துள்ளார் அஜ்மல்.. மலைப்பகுதி ஒன்றுக்கு போட்டோகிராபர் ஒருவருடன் செல்லும் அஜ்மல், அங்கே சந்திக்கும் திகிலான அனுபவங்களும் அதன் பின்னணியில் அடங்கியுள்ள மர்மங்களும் தான் படத்தின் கதையாம்.