Advertisement

சிறப்புச்செய்திகள்

ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை | ஒரு ‛என்' சேர்த்தால், வாழ்க்கை மாறிடுமா? : ஹன்சிகாவின் ஆசை | தெலுங்கில் 100 கோடி வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' | 'கப்ஜா' படத்தால் 'இன்ஸ்பயர்' ஆன 'ஓஜி' : இயக்குனர் கருத்தால் சர்ச்சை | விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் | திலீப்பின் கல்யாணராமன் படத்தை 23 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் நடிகர் லால் | தமிழ் இயக்குனர்களின் சாதியப் படங்கள் : துருவ் விக்ரம் விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எந்த ஒரு கட்டுக்கதையும் என்னை அழித்துவிட முடியாது ; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து அஜ்மல்

22 அக், 2025 - 10:34 IST
எழுத்தின் அளவு:
No-myth-can-destroy-me-Ajmal-puts-an-end-to-controversy


தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'அஞ்சாதே' படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் அஜ்மல் அமீர். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவருக்கு 'கோ' படத்தில் அவர் ஏற்று நடித்த வில்லன் கதாபாத்திரம் மீண்டும் உயிர் பெற்றுத்தந்தது. தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்து வரும் அஜ்மல் குறித்து சமீபத்தில் சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை கிளம்பியது.

ஒரு பெண்ணிடம் அஜ்மல் தரக்குறைவாக பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது. பலரும் அது அஜ்மல் குரல் தான் என்றும் அவர் இப்படி பேசுவது தவறு என்றும் கண்டன கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளிக்கும் விதமாக அஜ்மல் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறும்போது, “இரண்டு நாட்களுக்கு முன்பு எனக்கு இப்படி ஒரு அதிர்ச்சியான கெட்ட செய்தி வந்தது. இந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு என்னுடைய அன்பை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இப்படி என்னுடைய பெயரை களங்கப்படுத்தும் விதமாக இதுபோன்ற ஆடியோக்களை வெளியிட்ட நபர்கள் இந்த அக்கறையை, அன்பை சமுதாயத்தில் காட்டினால் நன்றாக இருக்கும். எந்த ஒரு கட்டுக்கதையோ அல்லது ஏஐ மூலம் குரல் மாற்றமோ அல்லது புத்திசாலித்தனமான எடிட்டிங்கோ எதுவுமே என்னையோ அல்லது என் திரையுலக பயணத்தையோ அழித்து விட முடியாது” என்று கூறியுள்ளார்.

மேலும், “இதற்கு முன்னதாக என் ரசிகர்கள் உருவாக்கி வைத்திருந்த ஒரு புரொபைலை தான் நான் பயன்படுத்தி வந்தேன். இன்றுமுதல் அதை என்னுடைய கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டேன். இனி என்னுடைய சோசியல் மீடியா கணக்கை நான் மட்டுமே கையாளப் போகிறேன். வேறு எந்த ஒரு அட்மினோ மற்றவர்களோ இதை கையாள முடியாது” என்றும் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா?இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ... சிரஞ்சீவி வீட்டில் நயன்தாரா குடும்பத்தினரின் தீபாவளி கொண்டாட்டம் சிரஞ்சீவி வீட்டில் நயன்தாரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in