‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி | 'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை | ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி | தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? | குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் | கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு | பிளாஷ்பேக்: ஹீரோக்கள் ஆதிக்கத்தை வென்ற மாதுரி தேவி |
தமிழில் முரட்டுக்காளை உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை சுமலதா. மறைந்த கன்னட நடிகரும் எம்.பியுமான அம்பரீஷன் மனைவியான இவர் கணவரின் மறைவை தொடர்ந்து தானும் அரசியலில் குதித்து தற்போது எம்.பியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்தநிலையில் இவரது மகன் அபிஷேக் அம்பரீஷ் கதாநாயகனாக நடித்து வரும் 'பேட் மேனர்ஸ்' என்கிற படத்தின் படப்பிடிப்பிற்காக தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடகாவில் மாண்டியாவில் உள்ள அரசாங்கத்தால் மூடப்பட்ட, செயல்படாத சர்க்கரை ஆலை ஒன்றை திறந்து, இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதற்கான அனுமதியை தனது எம்.பி என்கிற அரசியல் அதிகாரத்தின் மூலமாக சுமலதா பெற்று தந்துள்ளார் என அந்த பகுதியை சேர்ந்த விவசாய அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இதில் துளியும் உண்மையில்லை என மறுத்துள்ளார் சுமலதா
“எனது மகன் நடித்து வரும் படக்குழுவினரே சம்பந்தப்பட்ட அரசு துறையில் முறையான அனுமதியை பெற்றுத்தான் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இதில் என் பெயரை இழுப்பது அரசியல் ஆதாயத்திற்காகத்தான். இப்படி குற்றச்சாட்டை கூறியுள்ளவர்களுக்கு ஒரு விஷயத்தை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன், இதுபோன்ற படப்பிடிப்புகள் மூலம் உள்ளூர் வருமானம் அதிகரிக்கவும், உள்ளூர் சுற்றுலா வளரவும் தான் செய்யும் என்பதையும் அவர்கள் உணர வேண்டும்” என விளக்கம் கூறியுள்ளார் சுமலதா எம்பி.