என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

 'அஞ்சாதே' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அஜ்மல் அமீர். தொடர்ந்து வெற்றிச்செல்வன், இரவுக்கு ஆயிரம் கண்கள், நுங்கம்பாக்கம், நெற்றிக்கண்  உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் உடன் 'கோட்' படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் மீது 'சினம்' ,'உயிர் வரை இனித்தாய்'  போன்ற படங்களில் நடித்துள்ள நர்வினி டெரி  ரவிசங்கர் பாலியல் புகார் கூறியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது : எனது நண்பருடன் ஒரு மாலுக்கு சென்றிருந்தேன். அங்கு நடிகர் அஜ்மல் அமீரை சந்தித்தேன். அவர் என்னிடம் வந்து, 'நான் எனது அடுத்த படத்துக்கு ஹீரோயின் தேடிக்கொண்டு இருக்கிறேன். ஆடிஷனுக்கு வருகிறீர்களா?' என்று கேட்டார். மறுநாள் நான் ஆடிஷனுக்கு அவரது அலுவலகத்துக்கு  சென்றேன். அங்கு அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். 
அவருடன் நடனம்  ஆடச்சொல்லி வற்புறுத்தினார். நான், முடியாது என்று சொன்னேன். என்னை கட்டிப்பிடிக்க முயற்சித்தார். உடனே யாரோ ஒருவர் காலிங்பெல்லை அழுத்தினார். அஜ்மல் கதவை திறந்ததும் நான் வெளியே ஓடி வந்துவிட்டேன். இந்த விஷயத்தை நான் அப்படியே விட்டுவிட்டு வந்திருக்க கூடாது. அன்றிரவு நான் டென்மார்க் நாட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது. 
சில மாதங்கள் கழித்து இந்த விஷயத்தை திரைத்துறையை சேர்ந்த எனது நண்பர் ஒருவரிடம் சொன்னேன். அவர் அஜ்மலை நேரில் அழைத்து கண்டித்துள்ளார். அப்போதே அஜ்மல் மீது போலீசில் புகார் கொடுத்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், சினிமாவில் பல நல்ல மனிதர்களும் இருக்கின்றனர். அதனால் நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். 
 
           
             
           
             
           
             
           
            