பாடல் இல்லாத படம் 'சரண்டர்' | பிளாஷ்பேக்: மாதவி இரு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: 3 சகோதரிகள் இணைந்து நடித்த படம் | மோகன்லாலின் நவரச வீடியோவை வெளியிட்ட ‛மலைக்கோட்டை வாலிபன்' பட இயக்குனர் | படத்தை விமர்சிக்கும் முன் தங்கள் வீட்டு பெண்களிடம் ஒரு கேள்வியை கேளுங்கள் : ஜேஎஸ்கே இயக்குனர் ஆதங்கம் | மோகன்லாலின் நகை விளம்பரத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள போலீஸ் | நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்வேதா மேனன் | மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் | கடவுள் சிவனாக நடித்து வம்பு இழுக்கிறாரா நடிகர் மன்சூர் அலிகான் | என் மீதான காழ்ப்புணர்ச்சி : ‛டிக் டாக்' இலக்கியா விவகாரத்தில் திலிப் பதில் |
காமராஜர் வாழ்க்கை வரலாற்றை 'காமராஜ்' என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை "வெல்கம் பேக் காந்தி" என்ற பெயரிலும் தயாரித்த 'ரமணா கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து 'திருக்குறள்' என்ற படத்தைத் தயாரித்துள்ளது. ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோருடன், குணாபாபு, பாடினி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையராஜா பாடல்கள் எழுதி, இசையமைத்துள்ளார். சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். வருகிற 27ம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடந்தது.
விழாவில் படத்தின் இயக்குனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது: இந்த படம் உருவான கதையை ரொம்ப சுருக்கமாக சொல்லி விடுகிறேன். திருக்குறளை படமாக பண்ணுங்கன்னு ஒருத்தர் வேண்டுகோள் வைத்தார். எப்படி 1330 குறளை படமாக எடுக்க முடியும்னு யோசித்த போது எங்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது கருணாநிதியின் குரளோவியம். எதை ஓவியமா பண்ண முடியுமோ? அவர் அதை புத்தகமா எழுதிவிட்டார். அதிலிருந்து நாங்கள் எதையெல்லாம் காட்சிப்படுத்த முடியுமோ? அந்த குறள்களை எல்லாம் எடுத்துக் கொண்டோம் .
இந்த படத்துக்கான பணம் அது அதன் போக்குல வந்தது. இதுல எந்த சிரமமுமே எனக்கு இல்லை. வாழ்க்கையில பல விஷயங்கள் அதன் போக்குல தான் அதுவாக நிகழும். படம் செட் போட்டோம் அந்த நாள் முழுக்க மழை, செட் முழுக்க மழை, இடும்பைக்கு இடும்பை குறள் தான் ஞாபகம் வந்தது. அதைத்தாண்டி படம் முடித்தோம்.
அப்புறம் இளையராஜா சார் கிட்ட போனோம். படத்தை பார்த்து அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அற்புதமான இசையை தந்தார். தனலட்சுமி வாசுகியா நடித்துள்ள பெண், அவருக்கு முதல் படம், அவங்க வாழ்க்கையில முன்னுக்கு வரணும். இந்த துறையில ஜொலிக்கணும். என்றார்.