பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சாந்தனு பாக்யராஜ் தொடர்ந்து முன்னணி ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடி வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்திய 'ராவண கோட்டம்' படம் அதை பூர்த்தி செய்யவில்லை. அடுத்து அவர் நடித்த 'ப்ளூ ஸ்டார்' படம் ஓரளவுக்கு அவரை தாக்கு பிடிக்க வைத்தது. இந்த நிலையில் அவர் புதிதாக நடிக்கும் படம் 'மெஜந்தா'. இதில் அவரது ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்கிறார். இவர்களுடன் படவா கோபி, ஆர்.ஜே.ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு தயாரிக்கிறார்கள். பரத் மோகன் இயக்குகிறார். பல்லு ஒளிப்பதிவு செய்கிறார், தரண் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது.
படம் பற்றி இயக்குனர் பரத் மோகன் கூறியதாவது: காதல், நகைச்சுவை மற்றும் விஷூவலாக நிச்சயம் இருக்கும். அழகான சினிமாட்டிக் பீல்-குட் எண்டர்டெயினர் கதையாக இந்தப் படம் பார்வையாளர்களுக்கு இருக்கும். அவள் சூரிய உதயம், என்றால் அவன் அந்தி சாயும் நேரம். இருவரும் ஒருபோதும் சந்திக்க விரும்ப மாட்டார்கள். ஆனால், பிரபஞ்சம் அந்த நிழலை ஒரே புள்ளியில் இணைக்கிறது' என்ற தீம்தான் இந்தப் படம். என்றார்.