‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
மகாராஜா படத்தின் வெற்றிக்கு பிறகு ட்ரெயின், ஏஸ், பாண்டிராஜ் இயக்கும் படம் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அடுத்து தெலுங்கில் பூரி ஜெகநாத் இயக்கும் படத்திலும் அவர் நடிக்கப் போகிறார் என்று ஒரு செய்தி சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், சமீபகாலமாக பூரி ஜெகநாத் எந்த ஹிட் படத்தையும் கொடுக்கவில்லை. மகாராஜா படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதி புத்திசாலித்தனமாக படங்களை தேர்வு செய்வார் என்று நினைத்தால், இது போன்று தோல்வி பட இயக்குனர்களின் படங்களை தேர்வு செய்கிறாரே என்று அந்த நெட்டிசன் பதிவு போட்டுள்ளார்.
இதையடுத்து அதற்கு விஜய் சேதுபதி தரப்பில் எந்தவித பதிலும் கொடுக்காத நிலையில், நடிகர் சாந்தனு எக்ஸ் பக்கத்தில் அந்த நெட்டிசனுக்கு ஒரு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், யாரைப் பற்றியும் இதுபோன்று அவதூறாக பேச வேண்டாம். பொது வெளிவில் வார்த்தைகளை கவனவாக பேசுங்கள். பூரி ஜெகநாத் என்பவர் பிரபல தயாரிப்பாளர், இயக்குனர். மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை யாராக இருந்தாலும் கொடுக்க வேண்டும். சகட்டுமேனிக்கு யாரையும் விமர்சனம் செய்யாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார் சாந்தனு.