'கூலி' பற்றி ஆமிர்கான் எதுவுமே பேசவில்லை: அவர் தரப்பு விளக்கம் | அதிக சலுகைகள் பெறும் நடிகர்கள்: ஆமிர்கான் காட்டம் | 'மிராய்' பட்ஜெட் 60 கோடிதானா? | சவுபின் சாஹிர் வெளிநாடு செல்ல தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு | நம்நாடு, சந்திரமுகி, பார்க்கிங் - ஞாயிறு திரைப்படங்கள் | இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு |
தெலுங்குத் திரையுலக இயக்குனராக இருந்தாலும் பான் இந்தியா இயக்குனராக அடையாளத்தை ஆரம்பித்து வைத்தவர் ராஜமவுலி. 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். மகேஷ்பாபுவின் 29வது படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது. தற்போது படப்பிடிப்புக்கு சற்று இடைவெளி விட்டுள்ளார்கள்.
இந்தப் படத்தில் தமிழ் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்க உள்ளார் என கடந்த சில மாதங்களாகவே தகல்கள் வெளியாகி வந்தன. ஆனால், அது எதுவுமே உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் வில்லனாக நடிக்க தற்போதைய சூழலில் விருப்பமில்லை என விக்ரம் மறுத்துவிட்டாராம். அதனால், அவருக்குப் பதிலாக வேறொரு நடிகருடன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது. மாதவன் உள்ளிட்ட சில நடிகர்கள் அந்தப் பட்டியலில் இருக்கிறார்களாம். வலுவான ஒரு கதாபாத்திரம் என்பதால் அதற்கான தேர்வு கொஞ்சம் தாமதமாக நடந்து வருவதாகவும் சொல்கிறார்கள்.