2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

தெலுங்குத் திரையுலக இயக்குனராக இருந்தாலும் பான் இந்தியா இயக்குனராக அடையாளத்தை ஆரம்பித்து வைத்தவர் ராஜமவுலி. 'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். மகேஷ்பாபுவின் 29வது படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது. தற்போது படப்பிடிப்புக்கு சற்று இடைவெளி விட்டுள்ளார்கள்.
இந்தப் படத்தில் தமிழ் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்க உள்ளார் என கடந்த சில மாதங்களாகவே தகல்கள் வெளியாகி வந்தன. ஆனால், அது எதுவுமே உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் வில்லனாக நடிக்க தற்போதைய சூழலில் விருப்பமில்லை என விக்ரம் மறுத்துவிட்டாராம். அதனால், அவருக்குப் பதிலாக வேறொரு நடிகருடன் பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது. மாதவன் உள்ளிட்ட சில நடிகர்கள் அந்தப் பட்டியலில் இருக்கிறார்களாம். வலுவான ஒரு கதாபாத்திரம் என்பதால் அதற்கான தேர்வு கொஞ்சம் தாமதமாக நடந்து வருவதாகவும் சொல்கிறார்கள்.