மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
தமிழ் திரையுலகில் வாரிசு நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனு. இவர் சிறு வயதிலேயே இருந்தே சினிமாவில் நடித்து வந்தார். பின்னர் கதாநாயகனாக மாறினாலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போராடி வருகிறார். இந்த நிலையில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு சாந்தனுவிற்கும், கீர்த்திக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இன்னும் குழந்தை செல்வம் கிடைக்கவில்லை. பலரும் சாந்தனுவின் யு-டியூப் சேனலில் இது குறித்து தங்களது கவலைகளையும் ஆதங்கங்களையும் கேள்விகளாக கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் சாந்தனு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், “எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என பலரும் கேட்டு வருகிறீர்கள் ? நாங்கள் தயார். ஆனால் அதை நீங்கள் வளர்க்க போகிறீர்களா? இல்லையே.. இப்படி கேட்பதால் என்னை முரட்டுத்தனமானவன் என நினைக்க வேண்டாம். இது எங்களுடைய வலி. இதுபோன்று தொடர் கேள்விகள் எங்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கின்றன. கடவுள் எப்போது குழந்தை கொடுக்க வேண்டும் என சரியான நேரத்தை தீர்மானித்து இருப்பார்” என்று பதிலடி தரும் விதமாக கூறியுள்ளார்.