பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ் திரையுலகில் வாரிசு நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனு. இவர் சிறு வயதிலேயே இருந்தே சினிமாவில் நடித்து வந்தார். பின்னர் கதாநாயகனாக மாறினாலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போராடி வருகிறார். இந்த நிலையில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு சாந்தனுவிற்கும், கீர்த்திக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இன்னும் குழந்தை செல்வம் கிடைக்கவில்லை. பலரும் சாந்தனுவின் யு-டியூப் சேனலில் இது குறித்து தங்களது கவலைகளையும் ஆதங்கங்களையும் கேள்விகளாக கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் சாந்தனு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், “எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என பலரும் கேட்டு வருகிறீர்கள் ? நாங்கள் தயார். ஆனால் அதை நீங்கள் வளர்க்க போகிறீர்களா? இல்லையே.. இப்படி கேட்பதால் என்னை முரட்டுத்தனமானவன் என நினைக்க வேண்டாம். இது எங்களுடைய வலி. இதுபோன்று தொடர் கேள்விகள் எங்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கின்றன. கடவுள் எப்போது குழந்தை கொடுக்க வேண்டும் என சரியான நேரத்தை தீர்மானித்து இருப்பார்” என்று பதிலடி தரும் விதமாக கூறியுள்ளார்.