Advertisement

சிறப்புச்செய்திகள்

முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?”

11 ஆக, 2025 - 05:40 IST
எழுத்தின் அளவு:
Flashback-about-Oru-Naal-Podhuma-in-Thiruvilaiyadal-movie


வெள்ளித்திரையின் மூலம் ஆன்மீகத்தின் உன்னதத்தை சொல்லித்தந்து, பரம்பொருளை கண்முன் காட்டி, திரைமொழி வாயிலாக இறைமொழியை உணரச் செய்து, புராண திரைப்படங்களின் புகழ் மிக்க இயக்குநராக உயர்ந்து நின்றவர்தான் 'அருட்செல்வர்' இயக்குநர் ஏ பி நாகராஜன். சமூக மற்றும் புராண கதைகளின் நாயகனாக நடிகர் திலகம் சிவாஜிகணேசனை வைத்து இவர் தயாரித்து, இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் மாபெரும் வெற்றித் திரைப்படங்களாகவே அமைந்திருந்தன. “வடிவுக்கு வளைகாப்பு”, “குலமகள் ராதை”, “நவராத்திரி” போன்ற சமூக கதைகளின் வெற்றியைத் தொடர்ந்து, “சரஸ்வதி சபதம்”, “கந்தன் கருணை”, “திருவருட் செல்வர்”, “திருமால் பெருமை” என இவரும், சிவாஜியும் இணைந்து தந்த புராண வெற்றித் திரைப்படங்களின் வரிசையில் வந்து, 'வெள்ளி விழா' கொண்டாடிய ஒரு திரைப்படம்தான் “திருவிளையாடல்”.

சிவாஜியின் 100வது திரைப்படமான “நவராத்திரி”யின் வெற்றியைத் தொடர்ந்து, ஏ பி நாகராஜன், தயாரிப்பாளர் ஏ எம் ஷாகுல் ஹமீத் இருவரும் இணைந்து தயாரித்த திரைப்படம்தான் இந்த “திருவிளையாடல்”. இத்திரைப்படத்திற்கு இவர்கள் முதலில் வைத்த பெயர் “சிவலீலா”. இறைவன் சிவபெருமான் மனித வடிவில் பூமியில் அவதரித்து, பல தோற்றங்களில் வந்து, தனது பக்தர்களை சோதிப்பது போல், நான்கு குருங்கதைகளாக சொல்லப்பட்ட இத்திரைப்படத்தின் கதை, திருவிளையாடல் புராணத்தால் ஈர்க்கப்பட்ட ஒன்று.

அதில் ஒன்றுதான் இறைப்பணி ஒன்றே மூச்சென வாழ்ந்து, ஈசனைத் துதிபாடும் பாணபத்திரர் மற்றும் இருமாப்பு கொண்டு, தான் என்ற கர்வம் தலைக்கேறி, தனது இசை வல்லமையால் பாண்டிய ராஜ்ஜியத்தையே கைப்பற்ற நினைக்கும் திறமையான பாடகர் ஹேமநாத பாகவதர். இந்த இருவருக்குமிடையே இசைப் போட்டி நடக்க இருப்பதாக பாண்டிய சபையில் அறிவிப்பு வெளியாகும் முன், ஹேமநாத பாகவதர் பாண்டிய மன்னனின் அரசவையில் நிகழ்த்தும் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியாக வரும் பாடல்தான் “ஒரு நாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?” என்ற பாடல். இந்தப் பாடலைப் பாட இயக்குநர் ஏ பி நாகராஜனின் முதல் தேர்வாக இருந்தவர் பின்னணிப் பாடகர் 'இசைமணி' சீர்காழி எஸ் கோவிந்தராஜன்.

இந்தப் பாடலைப் பாட அவர் மறுப்பு தெரிவிக்க, பின்னர் பாடல் இன்னொரு இசைமேதையான எம் பாலமுரளி கிருஷ்ணாவிடம் சென்றது. தோடி, தர்பார், மோகனம், கானடா ஆகிய ராகங்களை உள்ளடக்கி, 'திரையிசைத் திலகம்' கே வி மகாதேவன் உருவாக்கித் தந்த இந்தக் காவிய மயமான ராகமாலிகைப் பாடலை, பாலமுரளி கிருஷ்ணா தனது தேனினும் இனிய குரல்வளத்தாலும், நடிகர் டி எஸ் பாலையா அவருக்கே உரித்தான அபாரமான உடல் மொழியாலும் சிறப்பித்துத் தந்து, இன்றும் கேட்போரை மெய்மறக்கச் செய்யும் ஒரு இசைப் பொக்கிஷமாக நிலைத்து நிற்கின்றது என்பதில் எந்த ஐயமும் இல்லை. 1965ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் ஒரு வெள்ளிவிழா திரைப்படமாக தனது வெற்றியைப் பதிவு செய்து, ஆண்டுகள் 60 ஆன போதிலும் இன்றும் மக்களால் ஆராதிக்கப்பட்டு வரும் ஒரு போற்றுதலுக்குரிய ஆன்மீக கலைச் சித்திரமாக இருந்து வருவதே இந்த “திருவிளையாடல்” திரைப்படத்தின் தனிச்சிறப்பு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதிமகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 ... முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in