Advertisement

சிறப்புச்செய்திகள்

'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர்

17 நவ, 2025 - 12:01 IST
எழுத்தின் அளவு:
Flashback-The-first-cinematographer-to-shoot-in-moonlight


சாதனைகள் படைத்த பல திரைப்பட ஆளுமைகள் கால ஓட்டத்தில் கரைந்து போய்விட்டார்கள். அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர் ஒளிப்பதிவாளர் மார்கஸ் பர்ட்லி.

ஏற்காட்டில் வாழ்ந்த பிரபல ஆங்கிலோ இந்திய குடும்பத்தில் பிறந்த இவர், புகைப்படங்களின் மேல் உள்ள ஆர்வத்தால் 1940ம் ஆண்டில், மும்பைக்குச் சென்று, 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகையில் புகைப்படக் கலைஞராக சேர்ந்தார். பின்னர், சென்னை வந்த பர்ட்லி பிரகதி ஸ்டுடியோவில் சேர்ந்தார். 1945ல் வெளிவந்த 'சுவர்க சீமா' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளரானார். நேஷனல் ஸ்டுடியோஸ், நியூடோன் ஸ்டுடியோஸ் மற்றும் வாகினி ஸ்டுடியோஸ் போன்ற பல நிறுவனங்களில் பர்ட்லி ஆஸ்தான ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

பாதாள பைரவி, மிஸ்ஸியம்மா, சாந்தி நிலையம் உள்ளிட்ட பல தமிழ் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். 1965ம் ஆண்டு வெளிவந்த மலையாள படமான 'செம்மீன்' இவரை இந்தியா முழுக்க பிரபலப்படுத்தியது. செம்மீன் படப்பிடிப்பின்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக வேறொரு ஒளிப்பதிவாளர் சில காட்சிகளை படமாக்கினார். இதனால் தேசிய விருதை தவறவிட்டார். 'சாந்தி நிலையம்' படத்திற்காக தேசிய விருது பெற்றார். கான் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருது பெற்ற முதல் இந்தியவர் இவர்.

செயற்கை வெளிச்சம், சூரிய வெளிச்சத்தில் படம்பிடிக்கப்பட்ட காலத்தில் முதன் முதலாக நிலவு வெளிச்சத்தில் படம்பிடித்தவர் இவர். கடைசி காலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவரை அவர் மரணம் அடையும் வரை தயாரிப்பாளர் நாகிரெட்டி தனது விஜயா மருத்துவமனையில் வைத்து பாதுகாத்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா!‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி ... பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in