'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

‛ஆர் ஆர் ஆர்' படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு ‛வாரணாசி' என்று டைட்டில் வைத்திருப்பதாக நேற்று அறிவித்துள்ளார்கள். இந்த படத்தில் மகேஷ்பாபு உடன் பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சமீபகாலமாக ஹாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வரும் பிரியங்கா சோப்ரா பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்திய படத்தில் நடிக்கிறார்.
இந்த வாரணாசி படத்தில் பிரியங்கா சோப்ராவின் போஸ்டர் ஒன்று சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் மஞ்சள் நிற புடவை கெட்டப்பில் துப்பாக்கியை வைத்து யாரையோ அவர் குறி வைப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. அவரது கதாபாத்திரத்தின் பெயர் மந்தாகினி என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் ஆக்சன் கதாபாத்திரத்துக்காக ஹாலிவுட் படங்களில் நடிக்க தான் வாங்குவது போன்று 30 கோடி சம்பளம் பிரியங்கா சோப்ரா வாங்கி இருப்பதாக டோலிவுட் வட்டார தகவல் தெரிவிக்கிறது.