பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. இதன் படப்பிடிப்பிற்காக அவ்வப்போது ஐதராபாத் வந்து செல்கிறார். அப்படி வந்து செல்லும்போதெல்லாம் ஐதராபாத்தில் பல பகுதிகளில் வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் மகேஷ்பாபு, ராஜமவுலி, வில்லனாக நடிக்கும் நடிகர் பிரித்விராஜ் ஆகியோருக்கு இடையே எக்ஸ் பக்கத்தில் நடந்த சுவாரசியமான உரையாடலில் மகேஷ்பாபு ராஜமவுலியிடம், “நீங்கள் எப்போது சார் மகாபாரதத்தை ஆரம்பிக்க போகிறீர்கள் ? ஏற்கனவே நம்முடைய தெலுங்கு பெண் ஒருவர் (பிரியங்கா சோப்ரா) கடந்த ஜனவரியில் இருந்து இதற்காகவே ஐதராபாத் வீதிகள் ஒன்று விடாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார்” என்று பிரியங்கா சோப்ராவை குறிப்பிட்டு கிண்டல் அடித்திருந்தார்.
அதற்கு தற்போது கிண்டலாக பதில் சொல்லும் விதமாக விடியற்காலையில் ஐதராபாத் தெருக்களில் தான் எடுத்த சில புகைப்படங்களை மகேஷ்பாபுவின் பெயரை குறிப்பிட்டு பகிர்ந்து கொண்டுள்ளார் பிரியங்கா சோப்ரா. அது மட்டுமல்ல, “ஹலோ ஹீரோ நீங்கள் படப்பிடிப்பு தளத்தில் என்னிடம் சொன்ன கதைகளை எல்லாம் வெளியில் நான் லீக் பண்ண வேண்டும் என விரும்புகிறீர்களா?” என்றும் கிண்டலாக கேட்டுள்ளார்.




