'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா நடிக்கும் 'வாரணாசி' படத்தலைப்பு அறிவிப்பு விழா, ஐதராபாத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. 100 அடி பிரமாண்ட டிஜிட்டல் ஸ்கிரீனில் படத்தலைப்பை வீடியோவாக வெளியிட்டார் ராஜமவுலி. சில தொழில்நுட்ப பிரச்னைகள் காரணமாக, முதல் 2 முறை அந்த வீடியோ பாதியில் நிறுத்தப்பட்டது. 3வது முறைதான் வெற்றிகரமாக ஒளிபரப்பானது.
அப்போது பேசிய ராஜமவுலி, 'எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. என் அப்பாவுக்கு அதிகம் உண்டு. அவர் ஆஞ்சநேயரை வணங்குவார். என் மனைவிக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. அவர்கள் இந்த பிரச்னையை சரி செய்யலாமே' என்று பேசினார். இது சர்ச்சை ஆகி உள்ளது. ராமாயணத்தின் ஒரு பகுதியை வாரணாசி படமாக எடுக்கும் ராஜமவுலி மேடையில் கடவுள் நம்பிக்கை இல்லை என்று பேசலாமா? அவரின் முந்தைய படங்களில் கடவுள் நம்பிக்கை காட்சிகள், கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகள் உணர்ச்சி பூர்வமாக இருந்தது. அப்படியானால் அவர் சினிமாவுக்காக, பணத்துக்காக இப்படிப்பட்ட காட்சிகளை வைத்தாரா? கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவரால் இப்படிப்பட்ட காட்சிகளை ரசித்து உருவாக்க முடியுமா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு விரைவில் ராஜமவுலி பதில் சொல்வாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேமேடையில் ஹீரோ மகேஷ்பாபுவை ராமர் வேடத்தில் பார்த்தபோது மெய் சிலர்த்தது என்றும் ராஜமவுலி பேசியிருந்தார்.