வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
மலையாளத்தில் பிரபல இயக்குனர் நாதிர்ஷா. நடிகர் திலீப்பும் இவரும் ஒரே காலத்தில் சினிமாவில் நுழைந்ததுடன் இருவரும் மிக நெருக்கமான நண்பர்களும் கூட. இயக்குனர் நாதிர்ஷா, 'கட்டப்பனையில் ஹிருத்திக் ரோஷன், அமர் அக்பர் ஆண்டனி' உள்ளிட்ட படங்களை இயக்கியதுடன் திலீப்பை வைத்து 'கேசு இ வீட்டின்டே நாதன்' என்கிற படத்தையும் இயக்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று தனது செல்லப்பிராணியான நோபில் என்கிற பூனையை குளிப்பாட்டி சுத்தம் செய்வதற்காக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு விலங்குகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் நாதிர்ஷா.
அப்போது அங்கிருந்த பெண் மருத்துவர் மற்றும் ஊழியர்கள் பூனைக்கு அதன் சீற்றத்தை தணிக்க வேண்டும் என்பதற்காக கழுத்தில் ஒரு கயிறு கட்டியதுடன் சிறிதளவு மயக்க மருந்தையும் கொடுத்திருக்கின்றனர். அந்த சமயத்தில் பூனை எதிர்பாராத விதமாக உயிரிழந்தது. இதனால் அதிர்ச்சியான நாதிர்ஷா இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து எர்ணாகுளத்தில் உள்ள பாலரிவட்டம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார் நாதிர்ஷா.
இந்த புகாரில் தனது செல்லப் பூனைக்கு கழுத்தில் கட்டப்பட்ட கயிறு காரணமாக மரணம் சம்பவித்ததா அல்லது அதிக மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் அது உயிரிழந்ததா? இது குறித்து பிரேத பரிசோதனை செய்து உண்மையை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார் நாதிர்ஷா.