திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து | சாலைவாசிகளுக்கு போர்வை வழங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் | படப்பிடிப்பில் விபத்து: கொதிக்கும் எண்ணெய் கொட்டி சான்வி காயம் | 'தாதா சாகேப் பால்கே' விருது மலையாள சினிமா கலைஞர்களுக்கு சமர்ப்பணம்: மோகன்லால் | 'மதராஸி' வெற்றியைக் கொண்டாடிய படக்குழு | பிளாஷ்பேக்: 300வது படத்தை இசையால் தாலாட்டிய இளையராஜா | பிளாஷ்பேக்: அந்தக்கால வடிவேலு | ராதிகாவின் தாயார் காலமானார் | பிளாஷ்பேக்: மதுரை தங்கம் திரையரங்கில் தூள் கிளப்பிய கே பாக்யராஜின் “தூறல் நின்னு போச்சு” |
மலையாள திரையுலக நடிகர் சங்கம் 'அம்மா' என்கிற பெயரில் இயங்கி வருகிறது. இதன் தலைவராக மோகன்லால் பொறுப்பு வகித்தார். கடந்த வருடம் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக நடிகர் சங்கத்தில் இருந்த பல நிர்வாகிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சிலர் கைது செய்யப்பட்டனர். இதற்கு தார்மீக பொறுப்பேற்று நடிகர் மோகன்லால் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பல நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.. ஆனால் பலமுறை பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான வில்லன் நடிகரான பாபுராஜ் தனது பொறுப்பை ராஜினமா செய்யவில்லை.. மோகன்லால் சொல்லியும் அவர் கேட்கவில்லை என்பதால் தான் மோகன்லால் விலகினார் என்றும் பாபுராஜ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அது மட்டுமல்ல தற்போது விரைவில் நடைபெற இருக்கும் நடிகர் சங்க தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு மீண்டும் நடிகர் பாபுராஜ் போட்டியிட விண்ணப்பித்தும் இருந்தார். இந்த நிலையில் தான், அவர் போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெறுகிறேன் என்றும் நடிகர் சங்கத்தில் இனி எந்த பொறுப்புகளிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் ஒரு கடிதம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்..
இது குறித்து நடிகர் பாபுராஜ் கூறும்போது, “கடந்த எட்டு வருடங்களாக நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறேன். ஆனால் எனக்கு கிடைத்ததெல்லாம் அவதூறுகளும், பாலியல் குற்றச்சாட்டுகள் மட்டுமே. நடிகர் மோகன்லால் விலகியபோது நானும் விலகுவதற்கு தான் முடிவு எடுத்தேன். ஆனால் பல உறுப்பினர்கள் என்னை விலக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் விலகவில்லை. ஆனால் இப்போது என்னால் தான் மோகன்லால் ராஜினாமா செய்தார் என்பது போல செய்திகளை திரித்து வெளியிடுகிறார்கள். அதனால் நான் இனி நடிகர் சங்கத்தின் எந்த செயல்பாடுகளிலும் கலந்து கொள்ளப் போவதில்லை. எந்த ஒரு பொறுப்புக்கும் போட்டியிடப் போவதில்லை. அதனால் என்னுடைய வேட்பு மனுவை வாபஸ் பெறுகிறேன். இதை யாருக்கும் பயந்து நான் செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.