பிளாஷ்பேக்: இளையராஜா நடித்த படம் | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் | லிப்லாக் காட்சி அவசியம் இல்லை ; அதிர வைக்கும் நடிகர் ஷேன் நிகம் | நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பொதுவாக சோசியல் மீடியாவில் பிரபல நட்சத்திரங்கள், குறிப்பாக நடிகைகள் தான் அதிகமாக அவதூறு தாக்குதலுக்கு ஆளாவார்கள். அதை பெரும்பாலும் செய்வது ஆண்களாக தான் இருக்கும். ஆனால் ஆச்சரியமாக கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக நடிகர் பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் மீது ஒருவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் அவதூறு தாக்குதல் வந்திருக்கிறார் என்பதும், அவர் ஒரு இளம்பெண் என்பதும் இன்னும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிப்பதாக இருக்கிறது. தற்போது அந்த பெண் யார் என்பது குறித்து புகைப்பட அடையாளத்துடன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தகவலை வெளியிட்டுள்ளார் சுப்ரியா மேனன்..
இது குறித்து சுப்ரியா கூறும்போது, “2018 முதல் என் மீது இந்த பெண் தொடர்ந்து அவதூறு தாக்குதல் நடத்தி வருகிறார். வெவ்வேறு போலியான கணக்குகளை துவங்கி இதை அவர் செய்து வந்தார். சில வருடங்களிலேயே அவரை நான் கண்டுபிடித்து விட்டாலும், இளம்பெண் என்பதால் அவரது எதிர்காலம் கருதி அமைதியாக இருந்தேன். தற்போது அவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் குழந்தையும் இருக்கிறது. நர்ஸ் ஆக வேலையும் பார்க்கிறார். இருந்தாலும் இப்போதும் என் மீதான அவரது அவதூறு தாக்குதல் நின்ற பாடில்லை” என்று கூறி அந்த பெண்ணின் சோசியல் மீடியா அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார் சுப்ரியா மேனன். மேலும் இது குறித்து சட்டரீதியாக நடவடிக்கையும் எடுக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.