சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

பொதுவாக சோசியல் மீடியாவில் பிரபல நட்சத்திரங்கள், குறிப்பாக நடிகைகள் தான் அதிகமாக அவதூறு தாக்குதலுக்கு ஆளாவார்கள். அதை பெரும்பாலும் செய்வது ஆண்களாக தான் இருக்கும். ஆனால் ஆச்சரியமாக கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக நடிகர் பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் மீது ஒருவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் அவதூறு தாக்குதல் வந்திருக்கிறார் என்பதும், அவர் ஒரு இளம்பெண் என்பதும் இன்னும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிப்பதாக இருக்கிறது. தற்போது அந்த பெண் யார் என்பது குறித்து புகைப்பட அடையாளத்துடன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தகவலை வெளியிட்டுள்ளார் சுப்ரியா மேனன்..
இது குறித்து சுப்ரியா கூறும்போது, “2018 முதல் என் மீது இந்த பெண் தொடர்ந்து அவதூறு தாக்குதல் நடத்தி வருகிறார். வெவ்வேறு போலியான கணக்குகளை துவங்கி இதை அவர் செய்து வந்தார். சில வருடங்களிலேயே அவரை நான் கண்டுபிடித்து விட்டாலும், இளம்பெண் என்பதால் அவரது எதிர்காலம் கருதி அமைதியாக இருந்தேன். தற்போது அவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் குழந்தையும் இருக்கிறது. நர்ஸ் ஆக வேலையும் பார்க்கிறார். இருந்தாலும் இப்போதும் என் மீதான அவரது அவதூறு தாக்குதல் நின்ற பாடில்லை” என்று கூறி அந்த பெண்ணின் சோசியல் மீடியா அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார் சுப்ரியா மேனன். மேலும் இது குறித்து சட்டரீதியாக நடவடிக்கையும் எடுக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.