சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

வாரிசு நடிகர்கள் என்பதால் எளிதாக வாய்ப்பை பெற்று விட்டார்கள் என்று ஆரம்பத்தில் குற்றம் சாட்டப்பட்டாலும் இன்றைய தேதியில் மலையாள திரை உலகில் அற்புதமான நடிகர்களாக பிரித்விராஜும் பஹத் பாசிலும் தென்னிந்திய அளவில், ஏன் பாலிவுட் வரை புகழ் பெற்றுள்ளனர். இந்த நிலையில் நடிகர் பிரித்திவிராஜ் சமீபத்தில் தனது முதல் பட வாய்ப்பு குறித்து புதிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது அவர் 12ம் வகுப்பு முடித்த கையோடு சினிமாவில் நடிப்பதற்காக ஆடிசன் நடைபெற்றது. இயக்குனர் பாசில் இயக்கும் படத்திற்காக நடைபெற்ற அந்த ஆடிசனில பிரித்விராஜுக்கு ஜோடியாக நடிகை அசினும் தனது முதல் படமாக கலந்து கொண்டார். ஆனால் சில காரணங்களால் பிரித்விராஜ் அதில் செட் ஆகவில்லை என்று தனது மகன் பஹத் பாசிலை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் பாசில்.
ஆனால் அவருக்கு ஜோடியாக அசின் பொருந்தவில்லை என்று கூறி அவருக்கு பதிலாக நிகிதாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் பாசில். ஆனால் அதே வருடத்தில் நடிகர் பிரித்விராஜ், இயக்குனர் ரஞ்சித் டைரக்ஷனில் நந்தனம் என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். அதேபோல அதற்கு அடுத்த வருடமே நடிகை அசினும் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகை என்கிற படத்தில், பல பிரபல நடிகைகளை அறிமுகப்படுத்திய இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் டைரக்ஷனில் அறிமுகமானார். பின்னாளில் மூவருமே மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றனர்.