மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு | மலையாள சினிமாவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'லோகா' | சைஸ் ஜீரோ தோற்றத்துக்கு மாறும் தமன்னா | ஜனநாயகன் படத்தில் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கலாம் : சொல்கிறார் வினோத் | ‛வீரம்' குழந்தை நட்சத்திரம் யுவினா நடிக்கும் ரைட் | 40 வருட இடைவெளி : அன்று நாயகன், இன்று வில்லன் | புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் |
ஆமீர்கான் தயாரிப்பு மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற “சித்தாரே ஜமீன் பர்” படத்தை, நேரடியாக யு-டியூபில் வெளியிடுகிறார். ஒரு பாலிவுட் படம் நேரடியாக யு-டியூபில் வெளியிடப்படுவது இதுவே முதன் முறை. அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை 100 ரூபாய் கட்டணம் செலுத்தி பார்க்கலாம். மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் அந்தந்த நாட்டின் சந்தைக்கேற்ற கட்டணத்திலும் பார்க்கலாம் என்றும் வேறு எந்த தளத்திலும் இந்த படத்தை காண முடியாது என்றும் அறிவித்துள்ளார்.
உலகளவில் 250 கோடி வசூலைக் குவித்து சாதனை படைத்த இந்த படம் யு டியூபில் வெளியிடப்படுவது குறித்து பலர் அதிர்ச்சி அடைந்தாலும், இது சினிமா வியாபாரத்தின் அடுத்த கட்டம் என்கிறார்கள். இந்த படத்தை பார்க்க தேவை இணைய இணைப்பு மட்டுமே. திரையரங்குகளில் தவறவிட்ட அல்லது மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு, இது பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள்.
இது குறித்து நடிகர்-தயாரிப்பாளர் அமீர் கான் கூறியிருப்பதாவது : கடந்த 15 ஆண்டுகளாக திரையரங்குகளுக்கு வராத பார்வையாளர்களை அல்லது பல்வேறு காரணங்களுக்காக திரையரங்குகளுக்குள் நுழைய முடியாதவர்களை எவ்வாறு சென்றடைவது என்ற சவாலில் நான் போராடி வருகிறேன்.
இறுதியாக அதற்கு மிகச்சரியான நேரம் வந்துவிட்டது. மின்னணு கட்டணங்களில் இந்தியா உலகில் முதலிடத்தைப் பிடித்தது. இந்தியாவில் இணைய ஊடுருவல் வியத்தகு முறையில் வளர்ந்து வருகிறது, மேலும் பெரும்பாலான சாதனங்களில் யு டியூப் இருப்பதால், இந்தியாவில் பரந்த அளவிலான மக்களையும், உலகின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியையும் நாம் இறுதியாக சென்றடைய முடியும்.
சினிமா அனைவருக்கும் நியாயமான மற்றும் மலிவு விலையில் சென்றடைய வேண்டும் என்பதே எனது கனவு. மக்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சினிமாவைப் பார்ப்பதற்கான வசதி கிடைக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். இந்த யோசனை வெற்றி பெற்றால், புவியியல் மற்றும் பிற தடைகளைத் தாண்டி படைப்பாற்றல் மிக்க வெவ்வேறு கதைகளைச் சொல்ல முடியும். சினிமா துறையில் நுழையும் இளைய படைப்பாளிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகவும் இருக்கும். இதை அனைவருக்குமான வெற்றியாக நான் பார்க்கிறேன் என்கிறார்.