கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

மலையாள திரையுலகில் பிரபல குணச்சித்திர நடிகரான சீனிவாசனின் மகன்கள் தான் வினித் சீனிவாசன் மற்றும் தியான் சீனிவாசன். இதில் வினித் சீனிவாசன் நடிகராகவும் இயக்குனராகவும் கேரளாவையும் தாண்டி தமிழகம் வரை நன்கு அறிமுகம் ஆகிவிட்டார். அண்ணன் வழியிலேயே தம்பியும் நடிகராக மாறி பின்னர் இயக்குனராகவும் மாறினார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா, நிவின்பாலி இணைந்து நடித்த 'லவ் ஆக்சன் ட்ராமா' என்கிற படத்தை இவர் இயக்கினார். அந்த படம் வெற்றி படமாக அமைந்தாலும் அடுத்தடுத்து படங்களை இயக்காமல் பிஸியான நடிகராக தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் அடுத்ததாக நடிகர் திலீப் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணமும் உண்டு. கடந்த மாதம் திலீப் நடிப்பில் அவரது 150வது படமாக 'பிரின்ஸ் அன்ட் பேமிலி' என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் திலீப்பின் தம்பியாக நடித்திருந்தார் தியான் சீனிவாசன். அது மட்டுமல்ல, இதற்கு அடுத்ததாக திலீப் நடித்து வரும் 'பா பா பா' படத்திலும் அவருடன் இணைந்து நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் ஒரு நல்ல நட்பு உருவாகிவிட்டது. இந்த சமயத்தில் தியான் சீனிவாசன் சொன்ன கதை திலீப்பிற்கு பிடித்துப்போய் விட்டதால் தனது படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்துள்ளாராம் திலீப்.
