சக்தித் திருமகன், கிஸ் படங்களின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | அமெரிக்க பிரீமியரில் பவன் கல்யாணின் ஓஜி படம் செய்த சாதனை! | எண்ணம் போல் வாழ்க்கை என்பது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது! -இட்லி கடை டிரைலர் விழாவில் தனுஷ் பேச்சு | ஷேன் நிகாமிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்: சாந்தனு | பவன் கல்யாண் படத்திற்கு சலுகைகளை அள்ளி வழங்கிய ஆந்திர அரசு | பிளாஷ்பேக்: 40 வருடங்களுக்கு முன்பே பிகினியில் கலக்கிய ஜெயஸ்ரீ | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய சி.ஆர்.ராஜகுமாரி | அவர்களை பிதுக்கணும். மசாலா தடவணும்... சமூகவலைதள பார்ட்டிகள் மீது கோபமான வடிவேலு | கவர்ச்சி உடைகளுக்கு வரும் விமர்சனம் குறித்து கவலை இல்லை! - நடிகை வேதிகா | மலையாளத்தில் அறிமுகமாவதை உறுதிபடுத்திய டிஎஸ்கே! |
தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது உலக அளவிலும் புகழ் பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் சென்னையைச் சேர்ந்த ஏஆர் ரஹ்மான். அடிக்கடி இசை வேலைகளுக்காக அமெரிக்காவிற்குச் செல்வார். தற்போது அமெரிக்கா சென்றுள்ள ஏஆர் ரஹ்மான், அங்கு மூத்த பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸை சந்தித்தது குறித்து பதிவிட்டுள்ளார்.
“எனது சிறுவயது அபிமானியை அவரது டல்லாஸ் இடத்தில் சந்தித்தேன். அவரது ஆராய்ச்சிப் பணிகளையும், இந்திய பாரம்பரிய, (கர்நாடக) இசையின் மீதான அவரது ஆர்வத்தையும் கண்டு வியந்தேன்,” என ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
ரஹ்மான் இசையில் 'பச்சைக் கிளிகள் தோளோடு, நெஞ்சே நெஞ்சே,' உள்ளிட்ட சில பாடல்களைப் பாடியிருக்கிறார் ஜேசுதாஸ்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா இசை, பக்திப் பாடல்கள் என இந்திய மொழிகளில் பலவற்றில் பாடியவர் ஜேசுதாஸ். சமீப காலங்களில் சினிமாவில் பாடுவதை குறைத்துக் கொண்டுவிட்டார்.