2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' |

தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது உலக அளவிலும் புகழ் பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் சென்னையைச் சேர்ந்த ஏஆர் ரஹ்மான். அடிக்கடி இசை வேலைகளுக்காக அமெரிக்காவிற்குச் செல்வார். தற்போது அமெரிக்கா சென்றுள்ள ஏஆர் ரஹ்மான், அங்கு மூத்த பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸை சந்தித்தது குறித்து பதிவிட்டுள்ளார்.
“எனது சிறுவயது அபிமானியை அவரது டல்லாஸ் இடத்தில் சந்தித்தேன். அவரது ஆராய்ச்சிப் பணிகளையும், இந்திய பாரம்பரிய, (கர்நாடக) இசையின் மீதான அவரது ஆர்வத்தையும் கண்டு வியந்தேன்,” என ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
ரஹ்மான் இசையில் 'பச்சைக் கிளிகள் தோளோடு, நெஞ்சே நெஞ்சே,' உள்ளிட்ட சில பாடல்களைப் பாடியிருக்கிறார் ஜேசுதாஸ்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா இசை, பக்திப் பாடல்கள் என இந்திய மொழிகளில் பலவற்றில் பாடியவர் ஜேசுதாஸ். சமீப காலங்களில் சினிமாவில் பாடுவதை குறைத்துக் கொண்டுவிட்டார்.