வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை பல வருடங்களாக தொகுத்து வழங்கி, சமீப வருடங்களாக அதன் நடுவராகவும் பொறுப்பு வைத்து வருபவர் ஈரோடு மகேஷ். காமெடி தொகுப்பாளர் என்று அறியப்பட்டாலும் பல கல்லூரிகளில் மாணவர்களை தன்னம்பிக்கை பேச்சால் தொடர்ந்து உற்சாகப்படுத்தி வரும் பணியையும் செய்து வருகிறார். சிவகார்த்திகேயன், ஈரோடு மகேஷ் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் ஒரே நிகழ்ச்சியில் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர்கள் தான். டிவி நிகழ்ச்சியை தாண்டி 2012ல் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் நடிகராகவும் மாறிய ஈரோடு மகேஷ், சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது சூரி நடிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நாளை (மே-16) வெளியாக இருக்கும் மாமன் படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் புரமோஷன் பெற்றுள்ளார். ஆம்.. இந்த படத்தின் இயக்குனருடன் இணைந்து படத்திற்கான நகைச்சுவை வசனங்களை ஈரோடு மகேஷ் தான் எழுதியுள்ளார். சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூரி இந்த தகவலை வெளியிட்டார்.




