ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதுநாள் வரை படம் குறித்து சின்ன தகவல்கள் கூட கசியாமல் பார்த்துக் கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்போது இந்த படம் பற்றி கொஞ்சம் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளார். குறிப்பாக இந்த படத்தில் நாகார்ஜுனா, அமீர்கான், உபேந்திரா என மற்ற மொழி திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்தாலும் கூட. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சத்யராஜ் ரஜினியுடன் இணைந்து நடிப்பது தான் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
இடையில் சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க சத்யராஜை அழைத்தபோது அவர் மறுத்து விட்டதுடன், அடுத்தடுத்த பல நிகழ்வுகளில் ரஜினி குறித்து விமர்சிக்கும் விதமாகத்தான் பேசினார். அப்படிப்பட்டவர் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தார் என்றால் அது லோகேஷ் கனகராஜின் கதை மற்றும் சத்யராஜின் கதாபாத்திரம் தான் காரணம். அதேசமயம் இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்த ஒரு காட்சியை சத்யராஜிடம் போட்டுக் காட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதை பார்த்த சத்யராஜ், “சிலர் ஹீரோக்களாக நடிப்பார்கள். ஆனால் உண்மையிலேயே நிஜ வாழ்வில் ஒருவர் ஹீரோவாக இருக்க முடியும் என்றால் அது ரஜினி தான்” என்று பாராட்டினாராம் சத்யராஜ். இந்த தகவலையும் தனது பேட்டியில் லோகேஷ் கனகராஜே கூறியுள்ளார்.