பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

தமிழ் சினிமாவில் இன்றைக்கு முன்னணியில் பல நடிகர்கள் கஷ்டப்பட்டு மேலே வந்தவர்கள்தான். லைட் பாய் ஆக, டிவி நிகழ்ச்சிகளில் சிறிய வேடங்களில் நடித்தவராக, சினிமாவில் ஓரிரு காட்சிகளில் தலை காட்டியவராக நடித்து பின் நகைச்சுவை நடிகராக உயர்ந்து, இன்றைக்கு நாயகனாகவும் உயர்ந்திருப்பவர் நடிகர் சூரி.
மதுரை அருகே உள்ள ராஜாக்கூர் என்ற ஊரில் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள். தங்களது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடும் வீடியோ ஒன்றை சூரி இரண்டு தினங்களுக்கு முன்பு எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார்.
அதற்கு ரசிகர் ஒருவர், “திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை.” என்று கிண்டலடித்து கமெண்ட் போட்டிருந்தார். அந்த நபருக்கு சரியான விதத்தில் பதிலடி கொடுத்துள்ளார் சூரி.
“திண்ணையில் இல்லை நண்பா, பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்… அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்,” என பதிலளித்துள்ளார்.
உழைப்பால் உயர்ந்த சிலரது உயர்வைப் பார்த்து பொறாமைப்படும் கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.