Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : எம்ஜிஆரின் 'ராஜகுமாரி'யை தீயிட்டு கொழுத்த முடிவு செய்த தயாரிப்பாளர்

19 மார், 2025 - 11:03 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-The-producer-who-decided-to-burn-MGR,-Rajakumari

எம்ஜிஆரின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் ராஜகுமாரி. இந்த படத்தை ஜூபிடர் பிலிம்ஸ் சோமு தயாரித்தார். சரியான வேலை இன்றி இருக்கும் தனது ஸ்டூடியோ ஊழியர்களுக்கு வேலை தர வேண்டும் என்பதற்காக எஸ்.ஏ.சாமியை சின்ன பட்ஜெட்டில் நமது ஊழியர்களை கொண்டே தயாரிக்க கூடிய வகையில் ஒரு கதையை எழுத சொன்னார். அதுதான் ராஜகுமாரி.

கதையை படித்த சோமு, கதை பிரமாதமாக இருக்கிறது. இந்த கதையை நம்மால் மட்டும் எடுக்க முடியாது, பெரிய பட்ஜெட்டில் பெரிய நடிகர்களை வைத்து எடுக்கலாம் என்று முடிவு செய்து நாயகனாக பி.யு.சின்னப்பாவையும், நாயகியாக டி.ஆர்.ராஜகுமாரியையும் நடிக்க வைக்கலாம் என்றார். அவரே படத்திற்கு 'ராஜகுமாரி' என்று பெயரும் வைத்தார்.

ஆனால் இயக்குனர் சாமி 'ரிஸ்க் எடுக்க வேண்டாம் நாமே படத்தை எடுத்து விடலாம்' என்று உறுதி அளித்து பட வேலைகளை ஆரம்பித்தார். வாட்டசாட்டமான அதே நேரத்தில் அழகான ஹீரோவை தேடினார். அப்போது அவர் 'ஸ்ரீமுருகன்' என்ற படத்தை பார்த்தார். அதில் எம்ஜிஆர் சிவதாண்டவம் ஆடியிருந்தார், அவரே ஹீரோ என்று முடிவு செய்தார் சாமி. நாயகியாக தெலுங்கு சினிமாவில் இருந்து அழைத்து வரப்பட்ட மாலதி நடித்தார்.

ஜூபிடர் பிலிம்சுக்கு பால் சப்ளை செய்து கொண்டிருந்த எம்.எம்.ஏ சின்னப்பா தேவர் முக்கிய கேரக்டருக்கு தேர்வானார். இவர்களுடன் எம்.என். நம்பியார், எம்.ஆர். சுவாமிநாதன், டி.எஸ். பாலையா, 'புலிமூட்டை' ராமசாமி, கே.மாலதி, தவமணி தேவி உள்ளிட்ட பலரும் நடித்தனர்.

படத்தை 11 ஆயிரம் அடியில் எடுத்து முடிக்க திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் முடியவில்லை. பட்ஜெட் எகிறியது. எடுத்தவரை படத்தை போட்டுபார்த்த தயாரிப்பாளர் சோமுவிற்கு படம் திருப்தி தரவில்லை. குறிப்பாக எம்ஜிஆர் பெண்களுக்குரிய அழகுடன் இருப்பதாக கருதினார்.

இன்னும் 7 ஆயிரம் அடி எடுத்தால்தான் படம் நிறைவடையும் என்கிற நிலை. இதனால் தயாரிப்பாளர் சோமு எல்லோரையும் அழைத்து "இன்னும் 4 ஆயிரம் அடிக்குள் படத்தை முடித்து விடுங்கள். அதன்பிறகும் படம் எனக்கு திருப்தி தராவிட்டால் படத்தை வெளியிடாமல் தீயிட்டு கொழுத்தி விடுவேன்" என்றார்.

அதன்பின்னர் ஒரு வழியாக படம் எடுத்து முடிக்கப்பட்டதும் படத்தை பார்த்த தயாரிப்பாளர் சோமு அசந்து விட்டார். இந்த மேஜிக் எப்படி நிகழ்ந்தது என்று எல்லோரிடமும் கேட்டுக் கொண்டிருந்தார். படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதும், எம்ஜிஆர் ஹீரோ ஆனதும் வரலாறு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'கல்கி 2' அப்டேட் கொடுத்த இயக்குனர்'கல்கி 2' அப்டேட் கொடுத்த இயக்குனர் 'ஐமேக்ஸ்'-ல் வெளியாகும் முதல் மலையாளத் திரைப்படம் 'எல் 2 எம்புரான்' 'ஐமேக்ஸ்'-ல் வெளியாகும் முதல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in