இரண்டாவது திருமணமா? : வதந்திக்கு மேக்னா ராஜ் கொடுத்த விளக்கம் | 10 வருடங்களுக்குப் பிறகு சிம்பு, சந்தானம் கூட்டணி | லாரன்ஸ், ஜேசன் சஞ்சய் படங்களில் நடிக்கும் டூரிஸ்ட் பேமிலி கமலேஷ் | அனிருத்துக்கு விஜய் தேவரகொண்டா எழுதிய காதல் கடிதம்! | காதலருடன் வந்து பாட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜான்வி கபூர் | தெலுங்கு இயக்குனர்களின் இயக்கத்தில் சூர்யா, கார்த்தி | இயல்புக்கு மீறிய படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்கள் : நாகார்ஜுனா | மலையாள படத்திற்காக பஹத் பாசிலுடன் மோதும் அர்ஜுன் தாஸ் | பழங்குடியினரை அவமதிக்கும் விதமாக பேசியதாக விஜய் தேவரகொண்டா மீது போலீஸில் புகார் | போனி கபூர், அனில் கபூரின் தாயார் மறைவு |
நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப் படம் 'கல்கி 2898 ஏடி'. 1100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்ற படம். இரண்டு பாகங்களாக வெளியாகப் போகும் படம் என்று ஆரம்பத்திலேயே சொன்னார்கள். முதல் பாகம் கடந்த வருடம் வெளிவந்த நிலையில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பாகாமல் இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் நாக் அஷ்வின் 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார்.
“கல்கி 2ம் பாகத்தின் படப்பிடிப்பு அனேகமாக இந்த வருடக் கடைசியில் ஆரம்பமாகும். அதற்கான முன்கட்ட வேலைகளை ஆரம்பித்துவிட்டோம். எப்போது சரியாக ஆரம்பமாகும் என்பதன் அறிவிப்பை பிரபாஸ் தேதிகளை உறுதி செய்த பின் அறிவிப்போம். ஆனால், இப்படத்தின் வேலைகள் நிச்சயமாக நடக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபாஸ் இப்படத்திற்குத் தேதிகளைக் கொடுக்கத் தள்ளிப் போடுகிறார் என்று ஒரு வதந்தி பரவியது. அதனால், நாக் அஷ்வின் வேறு ஒரு படத்தை அதற்குள் இயக்க உள்ளார் என்றும் தகவல் வெளியானது. அதற்காகத்தான் இப்படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார் நாக் அஷ்வின்.