டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப் படம் 'கல்கி 2898 ஏடி'. 1100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்ற படம். இரண்டு பாகங்களாக வெளியாகப் போகும் படம் என்று ஆரம்பத்திலேயே சொன்னார்கள். முதல் பாகம் கடந்த வருடம் வெளிவந்த நிலையில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பாகாமல் இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குனர் நாக் அஷ்வின் 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார்.
“கல்கி 2ம் பாகத்தின் படப்பிடிப்பு அனேகமாக இந்த வருடக் கடைசியில் ஆரம்பமாகும். அதற்கான முன்கட்ட வேலைகளை ஆரம்பித்துவிட்டோம். எப்போது சரியாக ஆரம்பமாகும் என்பதன் அறிவிப்பை பிரபாஸ் தேதிகளை உறுதி செய்த பின் அறிவிப்போம். ஆனால், இப்படத்தின் வேலைகள் நிச்சயமாக நடக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபாஸ் இப்படத்திற்குத் தேதிகளைக் கொடுக்கத் தள்ளிப் போடுகிறார் என்று ஒரு வதந்தி பரவியது. அதனால், நாக் அஷ்வின் வேறு ஒரு படத்தை அதற்குள் இயக்க உள்ளார் என்றும் தகவல் வெளியானது. அதற்காகத்தான் இப்படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார் நாக் அஷ்வின்.




