Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி

22 செப், 2025 - 03:01 IST
எழுத்தின் அளவு:
MGR-and-N.S.-Krishnans-help-Veteran-actor-M.N.-Rajam-Lainchi

தமிழ் சினிமாவில் உள்ள மூத்த நடிகைகளில் ஒருவர் எம்.என்.ராஜம். ரத்தக்கண்ணீர், பாசமலர், நல்லதம்பி, நாடோடி மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். இன்றைய தலைமுறைக்கு சொல்ல வேண்டுமானால் வின்னர், திருப்பாச்சி, மருதமலை படங்களில் பாட்டியாக நடித்தவர். இவர் கணவர் ஏ.எல்.ராகவன் பிரபல பின்னணி பாடகர், மறைந்துவிட்டார். 90வயதான எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம்.

சென்னையில் நேற்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழுவுக்கு வயது முதிர்வு காரணமாக வீல்சேரில் வந்து, அந்த விருதை பெற்றுக் கொண்டார் எம்.என்.ராஜம். அப்போது அரங்கமே எழுந்து நின்று கைதட்டி வாழ்த்தி அவருக்கு மரியாதை செய்தது. அவரின் காலில் விழுந்து பலர் ஆசி பெற்றனர்.

மதுரையில் பிறந்து வளர்ந்த எம்.என்.ராஜம் யார். சென்னை கோபாலபுரத்தில் அவர் வீடு எங்கே இருந்தது, அவர் கணவர் ஏ.எல்.ராகவன் யார் என விரிவான தகவல்களை வழங்கி வாழ்த்தி பேசினார் நடிகர் சிவகுமார். தனது 17வது வயதில் எம்.என்.ராஜத்தை பார்த்ததையும், பிற்காலத்தில் அவருடன் நடித்ததையும், ஆண்கள் மட்டுமே நடித்து வந்த நாடக கம்பெனிகளில் தனி பெண்ணாக நடித்த எம்.என்.ராஜம் திறமை, தைரியத்தையும் சிவகுமார் விளக்கினார்.
ஏற்புரை நிகழ்த்திய எம்.என்.ராஜம் 'தான் 7 வயதில் நடிக்க வந்தேன். சில ஆண்டுகள் வரை நடித்தேன். தானே நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர் என்றார். மேலும் அவர் பேசுகையில் ''அந்த காலத்தில் நடிகர் சங்க நிர்வாகத்தில் எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் இருந்தபோது, நடிகர்கள் வீட்டு விசேஷங்களில் குடும்ப உறுப்பினர்கள் மாதிரி கலந்து கொண்டு வாழ்த்துவார்கள், ஒரு நடிகைக்கு பிரச்னை என்றால், உடனே அது குறித்து விசாரித்து, அதை தீர்த்து வைப்பார்கள். இப்போதைய நிர்வாகமும் நல்லது செய்கிறது.'' என்றார்.

தேசியவிருது பெற உள்ள நடிகை ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், ஜி.வி.பிரகாசுக்கும் நடிகர் சங்க பொதுக்குழுவில் கவுரவம் செய்யப்பட்டது. அப்போது பேசிய ஊர்வசி 'நான் மலையாள படத்துக்காக தேசியவிருது பெறுகிறேன். ஆனாலும் தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதால் என்னை அழைத்து பாராட்டுகிறார்கள். வருங்காலத்தில் தமிழில் இப்படி தேசிய விருது பெறுபவர்களை மலையாள நடிகர் சங்கம் அழைத்து பாராட்ட வேண்டும்' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம்திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in