10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு |
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் பாபு. அவர் மீது வளர்ந்து வரும் இளம் நடிகை ஒருவர் கொச்சி காவல் நிலையத்தில் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை அவர் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதை தொடர்ந்த விஜய் பாபு தலைமறைவானார். அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து விஜய் பாபுவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. தான் குற்றவாளி அல்ல என நிரூபணமாகும் வரை நடிகர் சங்கத்தில் இருந்து விலகி இருப்பதாக கூறி விஜய் பாபு கடிதம் கொடுத்திருப்பதாகவும், அந்த கடிதத்தை ஏற்று கொள்வதாகவும் நடிகர் சங்க நிர்வாக குழு தெரிவித்தது.
இதற்கு நடிகைகள் ஸ்வேதா மேனன், மாலா பார்வதி உள்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விஜய் பாபுவை நடிகர் சங்கத்தில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மலையாள நடிகர் சங்கம் செவி சாய்க்கவில்லை.
இதைத்தொடர்ந்து நடிகர் சங்க புகார் கமிட்டியில் இருந்து ராஜினாமா செய்வதாக நடிகைகள் ஸ்வேதா மேனன், மாலா பார்வதி, குக்கு பரமேஸ்வரன் ஆகியோர் நடிகர் சங்கத்திற்கு ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளனர். இது மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன் பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய நடிகர் திலீபை நீக்க வேண்டும் என்று நடிகைகள் குரல் எழுப்பிய பிறகு அவர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.