300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
மலையாள தயாரிப்பாளரும் குணச்சித்திர நடிகருமான விஜய்பாபு மீது, கடந்த ஏப்ரல் மாதம் அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அடித்து துன்புறுத்தியதாகவும் துணை நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்தார். விஜய்பாபு மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தலைமறைவாக இருந்து வருகிறார். அதேசமயம் அங்கிருந்தபடியே தனது வழக்கறிஞர்கள் மூலமாக முன்ஜாமீனுக்கு விண்ணப்பித்தார் விஜய்பாபு.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் முதலில் விஜய்பாபு கேரளா திரும்புவதற்கான தனது ரிட்டர்ன் டிக்கெட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கட்டும் அதன்பின் முன்ஜாமீன் மனு பற்றி பரிசீலிக்கலாம் என கூறியது. அதை தொடர்ந்து துபாயில் இருந்து அவர் வெள்ளிக்கிழமை கேரளா திரும்புவதற்கான விமான டிக்கெட்டை அவரது வழக்கறிஞர்கள் சமர்ப்பித்ததுடன் விஜய்பாபுவை திங்கள் கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றோம் என உத்தரவாதமும் அளித்தனர்.
ஆனால் அவர்கள் குறிப்பிட்டதுபோல விஜய்பாபு நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.. அதுமட்டுமல்ல, அவர் இன்னும் துபாயில் இருந்தே கிளம்பவில்லை என்பது தெரியவந்துள்ளது.. ஏற்கனவே பாலியல் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், தான் அளித்த உத்தரவாதத்தை விஜய்பாபு மீறியுள்ளதால் அவருக்கு முன்ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் அவரை புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனராம்..