இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி சமீபகாலமாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
'நாடோடிகள், நிமிர்ந்து நில், அப்பா' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் தமிழில் வெளியான 'வினோதய சித்தம்' படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக திரும்புகிறார் சமுத்திரக்கனி. அதன்படி, சமீபத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை சந்தித்து புதிய படத்திற்கான கதையை கூறியுள்ளார் சமுத்திரக்கனி. இந்த படத்தை கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
இது எல்லாம் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சமுத்திரக்கனி தெலுங்கில் பவன் கல்யாண், நானி போன்ற நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




