காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா |
மலையாளத்தில் வளர்ந்து வந்த இளம் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜய்பாபு. இவர் மீது புதுமுக நடிகை ஒருவர் தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து எர்ணாகுளம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய் பாபுவை கைது செய்ய தேடிவந்த நிலையில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.
இந்த நிலையில் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது, அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம். அவர் முதலில் இந்தியா திரும்பட்டும் அதன்பிறகு முன்ஜாமீன் பற்றி யோசிக்கலாம் என கூறிவிட்டது. இந்த நிலையில் தான் விரைவில் இந்தியா திரும்புவதாககூறி தனது ரிட்டர்ன் டிக்கெட்டையும் தனது வழக்கறிஞர் மூலம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார் விஜய்பாபு.
இதற்கிடையில் விஜய்பாபு தற்போது நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், புகார் அளித்த நடிகையுடன் தனக்கு நட்பு இருந்ததாகவும், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. அவர் சம்மதத்துடன்தான் எல்லாம் நடந்தது என்றும். அந்த மனுவில் தெரிவித்துள்ளார் இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.