நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' |

மலையாளத்தில் வளர்ந்து வந்த இளம் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜய்பாபு. இவர் மீது புதுமுக நடிகை ஒருவர் தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து எர்ணாகுளம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய் பாபுவை கைது செய்ய தேடிவந்த நிலையில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.
இந்த நிலையில் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது, அவர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம். அவர் முதலில் இந்தியா திரும்பட்டும் அதன்பிறகு முன்ஜாமீன் பற்றி யோசிக்கலாம் என கூறிவிட்டது. இந்த நிலையில் தான் விரைவில் இந்தியா திரும்புவதாககூறி தனது ரிட்டர்ன் டிக்கெட்டையும் தனது வழக்கறிஞர் மூலம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார் விஜய்பாபு.
இதற்கிடையில் விஜய்பாபு தற்போது நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், புகார் அளித்த நடிகையுடன் தனக்கு நட்பு இருந்ததாகவும், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. அவர் சம்மதத்துடன்தான் எல்லாம் நடந்தது என்றும். அந்த மனுவில் தெரிவித்துள்ளார் இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.