நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பில் சென்னை நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை கருத்தரங்கை துவக்கி வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதில் பேசும்போது "திரைப்படங்களில் குட்கா உள்ளிட்ட போதை பொருள்களின் தீங்கு பற்றிய விழிப்புணர்வு திரைப்படங்களில் இடம்பெற வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் திரைப்படங்களில் போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நடிகர்களை கொண்டு போதை பொருள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுவது என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் நாசர் விடுத்துள்ள அறிக்கையில் "முதல்வரின் கோரிக்கையை ஏற்பது எங்கள் கடமை. முதல்வரின் வேண்டுகோளை ஏற்று வருங்காலங்களில் குட்காவுக்கு எதிரான விழிப்புணர்வை அதிகரிக்கவும், முன்னணி நடிகர்களை வைத்து குட்கா போன்ற போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.